tamilnadu

img

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்த கிராம மக்கள்

வேலூர், அக்.3- வேலூர் மாவட்டம், ஆம்பூர் வட்டம், விண்ணமங்களம் ஏரி தூர் வாருவதில் ஆளும்  அதிமுக பிரமுகர்களின் துணையோடு ரூபாய்  33 லட்சம் வரைக்கும் முறைகேடு நடந்த தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரச் செயலாளர் வ.அருள் சீனிவாசன் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விண்ணமங்களம் இந்து நடு நிலைப்பள்ளியில் கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்திருந்தனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒருவரும் வராததைக் கண்டித்து கிராம மக்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாகக் கூறி வெளி யேறினர். ஏரியை முறையாக தூர் வாராததால் மழை நீர் தேங்காமல் உள்ளது என்றும் ஏரிக்  கரையில் ஓட்டை ஏற்பட்டுள்ளதால் நீர் மிக வேகமாக வெளியேறி வருகிறது என்றும் கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.