விஐடியில் ரிவேரா 20 சர்வதேச கலை விழாவை அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் பி.கணேசன் வியாழ்ன்ன்று (பிப். 13) துவக்கி வைத்தார். கௌரவ விருந்தினராக பிரபல படகுப்போட்டி வீரர் ரோஹித் குமார் கலந்து கொண்டார். புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அமைதியை வலியுறுத்தி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் 4,958 பேர் கலந்து கொண்டனர். இதில் சந்தோஷ் குமார், கலைச்செல்வி முதலிடத்தையும், பெஞ்சமின், தமிழரசி இரண்டாவது இடத்தையும் சிவோஹேஷ், பவித்ரா மூன்றாமிடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கபடி வீரர் பி.கணேசன் பரிசு வழங்கினார்.