tamilnadu

img

ரெயிலில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேசன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் சென்னை-திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் அரக்கோணம்-திருப்பதி ரெயில் ஆகியவற்றில் சோதனையில் ஈடுபட்டனர்.


அப்போது பயணிகளின் சீட்டுக்கு அடியிலும், கழிவறைகளில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேசன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து அரக்கோணம், வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குபதிவு செய்து ரேசன் அரிசியை கடத்தியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


;