சென்னை ஏப்.7- ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோ தனையை தீவிரப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ள 571 பேரில், 507 பேர் தில்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்று சுகாதாரத்துறைச் செயலா ளர் கூறுகிறார். ஆனால் உண்மை நிலை என்ன? சீனாவில் கொரோனா கண்டறியப்பட்ட டிசம்பர் மாதத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளில் குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு கல்வி, தொழில் நிமித்தமாகச் சென்றோர் மற்றும் சுற்றுலா பயணிகள் லட்சக்க ணக்கானோர் இந்தியாவுக்குத் திரும்பி உள்ளனர்.
தமிழ்நாட்டிலும் பல்லாயிரக் கணக்கானோர் வெளிநாடுகளிலிருந்து தாயகம் திரும்பி இருக்கின்ற னர். இவர்கள் அனைவரையும் கண்டறிந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை பரிசோதனை நடத்தியதா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ்நாட்டின் மொத்த 8 கோடி மக்கள் தொகை யில், வெறும் 38 லட்சம் பேர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதும், வெறும் 4 ஆயிரத்து 612 பேருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய் யப்பட்டுள்ளது என்பதும் தமிழக அரசின் அறி விப்பின் மூலம் தெரிகிறது. ரத்தப் பரிசோதனை ஆய்வகங்களை அதிகரித்து கொரோனா பரிசோ தனையை முழு வீச்சுடன் செயல்படுத் தினால்தான் கொரோனா தொற்றுக்கு உள்ளான மக்களின் உண்மையான எண்ணிக்கையை அறிய முடியும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.