tamilnadu

img

காலமானார்

 சங்கராபுரம். நவ,16-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டக்குழு உறுப்பினரும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு மலைவாழ் இளைஞர் சங்கத்தின் மாநிலப் பொருளாளருமான வி.ஏழு மலை அவர்களின் தாயார் ஆரியமாலா (63) சனிக்கிழமை யன்று (நவ.16) காலமானார்.  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சங்கராபுரம் வட்ட செயலாளர் இ.மீனாவின் மாமியாரான ஆரியமாலாவின் உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழு மலை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கே.பூவ ராகன், பி.சுப்பிரமணியன், வட்டச் செயலாளர் வை.பழனி, ச.சசிகுமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜிஸ்குமார், மாவட்டத் தலைவர் எம்.கே.பழனி, பொருளாளர் ஆர்.பூமாலை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ.தேவி, செயலாளர் இ.அலமேலு, ஏ.சக்தி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.  கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் ஆகியோர் கைப்பேசி மூலம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார். இறுதி நிகழ்வுகள் ஞாயிறன்று (நவ.17) காலை கொசப்பாடியில் நடைபெறுகிறது.