tamilnadu

விருதுநகர் முக்கிய செய்திகள்

நுண் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் 
விருதுநகர், ஜூலை.6-  விருதுநகர் நகராட்சி 17- ஆவது வார்டுக்கு உட்பட்டது பர்மா காலனி. இங்கு இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெரும் பாலும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. குடும்ப கஷ்டத்தால் நுண்நிதி நிறு வனங்களில் கடன் பெற்றுள்ளோம். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் வேலை இல்லை. வாங்கிய கடனை சரிவர கட்ட முடியவில்லை. இந்த நிலையில், நுண்நிதி நிறுவன ஊழியர்கள் பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். மேலும் மாலை ஆறு மணி வரை வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு செல்ல மறுக்கின்ற னர். இதனால் மன உளைச்சலுக்கு உள் ளாகியுள்ளோம். எனவே, இந்நிறுவனத்தி னர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென பகுதி மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

தீ பற்றிய கார்
திருவில்லிபுத்தூர், ஜூலை 6-  திருவில்லிபுத்தூர் அருகே அரசு போக்குவரத்து பணிமனை அருகே நிறுத் தப்பட்டிருந்த காரில் ஞாயிறு இரவு 11 மணி அளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது இதுபற்றி அந்த வழியாக சென்ற வர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை போராடி அணைத்தனர். காரின் அருகே கிடந்த குப்பைகளில் பிடித்த தீ காரிலும் பரவி கார் தீ பிடித்தது தெரிய வந்தது. திருவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.

தரமற்ற முறையில் தார் சாலைகள்  
விருதுநகர், ஜூலை.6- விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களிலேயே சாலை யானது பழுதடையும் நிலை ஏற்பட்டுள் ளது.  இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது. அதில் கூறப் பட்டிருப்பதாவது :- சத்திரரெட்டியபட்டி முதல் - என்.எச் சாலை வரை புதியதாக தார் சாலை போடப்பட்டுள்ளது. சாலை தரமாக அமைக்கவில்லை. பாலாஜி நகர் பகுதியில் போடப்பட்ட சாலை ஓரிரு நாளில் பெயர்ந்து விட்டது. அரசு நிதி வீணாகியுள்ளது. மாவட்ட நிர்வாகம், இந்தச் சாலையை ஆய்வு செய்து தர மின்றி சாலை அமைத்த ஒப்பந்தகாரர் மற்றும் அதற்கு துணை போன அதிகாரி கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது.

மருந்து தெளிக்க சிபிஐ கோரிக்கை 
விருதுநகர், ஜூலை 6- விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகை யில் பொது மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் வழங்குவதை தீவி ரப்படுத்த வேண்டும் என சிபிஐ மாவட்டச் செயலாளர் பொ.லிங்கம், முன்னாள் சட்ட பேரவை உறுப்பினர் தி.ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் வி.பாலமுருகன் உள்ளிட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். கோரிக்கை மனு அளித்துள்ளது. அம்மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரிசோதனையை மாவட்டம் முழுவதும் அதிகப்படுத்த வேண்டும். கிருமிநாசினிகளை மாவட்டம் முழு வதும் ஹெலிகாப்டர் மூலம் தெளிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், சத்து மாத்திரைகள் வழங்க வேண்டும். கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டுமென மனுவில் கூறப்பட்டிருந்தது.

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலிறுத்தல் 
விருதுநகர், ஜூலை 6- தமிழக சிறைகளில் பத்து வருடங்க ளுக்கு மேல் உள்ள சிறையிலுள்ள சிறை வாசிகளை விடுதலை செய்ய வேண்டு மென ஆதித் தமிழர் கட்சியின் மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், மாவட்டஙச செய லாளர் விருதை வசந்தன் ஆகியோர் ஆட்சி யர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.  அவர்கள் அளித்துள்ள மனுவில், “தமி ழக சிறைகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் ஏராளாளான ஆயுள் தண்டனை வாசிகள் உள்ளனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஏழு பேரையும் விடு தலை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர்.