கள்ளக்குறிச்சி, ஜூலை 15- விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் நடைபெற்ற கோடைவிழா வில் மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகளும், மாண வர்களின் சாகச விளை யாட்டு நிகழ்ச்சிகளும் நடை பெற்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற கோடைவிழா வில் பல்வேறு துறைகளின் சார்பில் நடைபெற்ற கண்காட்சியில் சிறந்த அரங்கு அமைத்ததற்காக தோட்டக்கலைத் துறைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. மலைவாழ் மக்களின் கலை நிகழ்ச்சிகளும், மலை வாழ் மாணவர்களின் சாகச நிகழ்ச்சிகளும் காண்பவரை வெகுவாக கவர்ந்தன. விழாவின் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மகேந்தி ரன், இணை இயக்குனர் ரத்தினமாலா, கூடுதல் துணை காவல் கண்கா ணிப்பாளர் சரவணன், சுகா தாரத்துறை திட்ட இயக்கு னர் ஜெமினி, சுற்றுலாத் துறை அலுவலர் சின்னச் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் ரவி வர வேற்றார். இதில் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசினார். விழாவில் தோட்டக் கலைத் துறைக்கு முதல் பரி சும், குழந்தைகள் நலத் துறைக்கு 2ஆம் பரிசும், வேளாண்துறைக்கு 3ஆம் பரிசும், சுகாதாரத்துறை மற்றும் வனத்துறைக்கு சிறப்பு பரிசும் வழங்கப் பட்டது. மேலும் கபடி உள் ளிட்ட பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளும், மல்லர் கம்பம் போட்டியின் மூலம் மாணவர்களின் சாகச திறனும் வெளிப் படுத்தப்பட்டன. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.