tamilnadu

img

மக்கள் கருத்துக்களை கேட்டு மாற்றுக் கல்விக் கொள்கையை உருவாக்கிடுக!

சென்னை, ஜூலை 25- மாணவர் விரோத புதிய கல்விக் கொள்கை 2019 வரைவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகில் கையெழுத்து இயக்கத்தை மாநிலச்செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,  மத்திய அரசாங்கம் அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை திட்டம் குறித்து கருத்து சொல்ல லாம் என்கிறது. ஆனால்  எல்லோரிடமும் கருத்து கேட்கப்படுவதில்லை. மாற்றுக் கருத்து சொன்ன பிரபல நடிகர் சூர்யா மீது பாஜக தலைவர்கள் அவதூறு பொழிவ தோடு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். கடந்த காலத்தில் மத்திய அரசு புதிய கொள்கையை கொண்டுவரும் போது மக்களி டம் கருத்துக்கள் கேட்கப்படும். ஆனால் மோடி ஆட்சியில் மக்களிடம் மட்டுமல்ல; மாநில முதலமைச்சரிடமோ, அமைச்சர வையின் ஒப்புதலோ கூட பெறப்படாமல் சில கொள்கை களை திணிக்க முற்படுகிறது. ஜூலை இறுதிக்கு பின்னர், கருத்து கேட்ட தாகவும்  பெரும்பான்மையினர் ஆதரவு தெரி வித்ததாகவும், கருத்து சொல்லாமல் மவுன மாக இருந்ததை சம்மதத்திற்கு அறிகுறி எனக்கூறிக்கொண்டு கல்விக்கொள்கையை அமல்படுத்தும் அபாயம் உள்ளது என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்கு அனுமதியா?

அரசுப்பள்ளியில் 50 மாணவர்களுக்கு குறைவாக படித்தால் அந்தப்பள்ளியை மூடிவிட்டு அருகில் உள்ள பள்ளியில் சேர்ந்து படிக்கவேண்டுமாம். இதனால் அருகமை பள்ளி முறை பாதிக்கப்பட்டு மாணவர்களை கல்வியிலிருந்து விரட்டும் நிலை ஏற்படும். இதையொட்டி 3லட்சம் அரசுப்பள்ளிகள் மூடும் அவலநிலை ஏற்படும்.  தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் கொள்ளை லாபம் சம்பாதிப்பது போதாது என்று வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதித்து கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்கும் வழிவகை செய்யப்படஉள்ளது. புதிய கல்விக் கொள்கை அமலானால் தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்கும்.  இதனால் சமூக ரீதியில் பின்தங்கிய மாண வர்களுக்கான இடஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை இன்றி மாணவர்கள் பாதிக்கும் பரிதாபநிலை ஏற்படவுள்ளது. பணம் இருப்ப வர்கள் மட்டும் தான் படிக்க முடியும். ஏழை குழந்தைகளின் கல்விக்கனவு எட்டாக்கனியாக மாறும். 3 ஆம் வகுப்பி லிருந்து பொதுத்தேர்வு துவங்குகிறது. 9 லிருந்து 12ஆம் வகுப்பு வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பருவத்தேர்வு என 8முறை தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். இதற்கிடையில் 5 பொதுத்தேர்வுகளை சந்திக்க வேண்டும். கலை, சட்டம், பொறியியல் கல்லூரிகளில் சேர நீட் தேர்வை போன்று தேசிய அளவில் நுழைவுத்தேர்வு எழுதும் அபாயம் உள்ளது.  

விஞ்ஞானத்திற்கு எதிரானது

புதிய கல்விக்கொள்கை அமலானால் கை நாட்டு இடும் மக்கள் அதிகம் கொண்ட  நாடாக இந்தியா மாறும். மும்மொழி திணிப்பு  என்பதுவிஞ்ஞானத்திற்கு எதிரானது. மக்கள் கருத்தைக் கேட்டு மாற்று கல்விக்கொள்கை யை உருவாக்கவேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வியுற்றால் மேற்கொண்டு படிக்கும் ஏற்பாடு நம் சமூக சூழலில்  உண்டா?

நாடாளுமன்றத்தில் விவாதித்திடுக!

எனவே கல்வி போதிக்கும் முறையை நாசப்படுத்தும் இந்த கல்விக் கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உள்ளனர். இந்நிகழ்விற்கு கட்சியின் மூத்த தோழர் எம்.வி.கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டச்செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், சிபிஎம் துறைமுகம் பகுதிச்செயலாளர் எம்.ஜலாலுதீன் ஆகியோர் பேசினர்.  பகுதிக்குழு உறுப்பினர்கள் பொதுமக்களிடமும் சாலை யோர வியாபாரிகளிடமும்  கையெழுத்துக் கள் பெற்றனர். நிறைவாக டி.எஸ்.ஜமால் நன்றி கூறினார்.  
 

ஜி.ராமகிருஷ்ணன்

தென்சென்னை மாவட்டம், வேளச்சேரி, மயிலாப்பூர் பகுதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் கையெழுத்து இயக்கத்தை  தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், “நாடு முழுவதும் ஒரே துறை, அதற்கு பிரதமர்தான் தலைவர் என்ப தாக புதிய கல்விக் கொள்கை உள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் எதிர்ப்பு இயக்கங் கள் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு முற்றாக கைவிட வேண்டும்” என்றார். வேளச்சேரி பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி, மயிலாப்பூரில் நடைபெற்ற இயக்கத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.சரஸ்வதி, எஸ்.ஜெயசங்கரன், பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.