tamilnadu

img

போராட்டத்தை தூண்டுவதை கைவிடுக!

பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை,டிச.25- பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களை போராடத் தூண்டுவதை பாஜக அரசு கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இந்திய பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக சரிந்து ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக ஐ.எம்.எப்பும், பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டு கால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது. பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களை போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் மத்திய பாஜக அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியை விரும்பும் மக்கள் மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

;