tamilnadu

img

நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பை ஒழுங்குபடுத்த ரிசர்வ் வங்கி திட்டம்!

இந்திய ரிசர்வ் வங்கி, அதன் கீழ் செயல்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களை கண்காணிப்பு அமைப்பை ஒழுங்குபடுத்த திட்டமிட்டுள்ளது. 

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏற்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாளும் வகையில், கண்காணிப்பு அமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கான பணிகள் குறித்து ரிசர்வ் வங்கி, அதன் நிர்வாக இயக்குநர்கள் குழுவுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க உள்ளது.

இந்த கலந்துரையாடலில், பல்வேறு கண்காணிப்பு பணிகள் குறித்தும், இந்த பணிகளுக்கான தனி பிரிவு அல்லது ஒரு தலைமையின் கீழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் தரவுகளை தொடர்ந்து பகுப்பாய்வு செய்ய வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி அல்லாத பெரிய நிதி நிறுவனங்களின் தோல்வி, கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் குறைபாடுகள், ஆடிட்டர்கள் இழைக்கும் தவறுகள் உள்ளிட்ட சில காரணிகளை கணக்கில் கொண்டு இந்த திட்டத்தை வடிவமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.