tamilnadu

img

ராஜஸ்தான் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து - 25 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று மெஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலியாகி உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் இருந்து சவாய் மாதோபூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று 28 பேருடன் சென்றது. பூண்டி மாவட்டத்தின் பப்டி கிரமத்திற்கு அருகே உள்ள பாலத்தில் மேல் பேருந்து சென்றுகொண்டிருந்த போது, ஓட்டுனர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார். இதை அடுத்து, 80 அடி உயரத்தில் இருந்து பேருந்து மெஜ் ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் ஆற்றில் மூழ்கிய பேருந்தை மீட்டனர். இதில், 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் மொத்தமாக 3 குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உட்பட 25 பேர் பலியாகி உள்ளனர்.