tamilnadu

img

தேர்தல் ஆணையத்தை சட்டப்பூர்வமாக எதிர்கொள்வோம்

வளர்த்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பாஜகவும் திரிணாமுல் காங்கிரசும் மதவெறிச் சூழலை போட்டி போட்டுக்கொண்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றன.”இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.


இந்தியாவில், இடதுசாரிகளின் ஆதரவு இல்லாமல் மாற்று அரசாங்கம் எதையும் அமைத்திட முடியாது என்பதை காங்கிரஸ் கட்சி தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஒரு செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சீத்தாராம் யெச்சூரி பதிலளித்தார்.


அதேபோன்று மோடி – மம்தா இடையேயான பரஸ்பர பரிவர்த்தனை தொடர்பாக ஒரு செய்தியாளர் கேட்டபோது. அப்போது அவர்கள் என்ன பேசினார் கள் என்பதை மோடிதான் வெளிப்படுத்த வேண்டும். மோடி அதனை வெளிப்படுத்தாத வரை, யாரும் அதனைத் தெரிந்துகொள்ள முடியாது என்றார்.  மேற்கு வங்க நிலைமை குறித்து அவர் கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாபெரும் கவலை என்னவெனில், மேற்கு வங்கத்தின் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்களா என்பதேயாகும். இதுவரை நடைபெற்ற மூன்று கட்ட வாக்குப்பதிவுகளில் பல வாக்குச்சாவடிகள் ஆளும் கட்சியினரால் கைப்பற்றப்பட்டன. மத்திய ரிசர்வ் படையினர் குவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டபோதிலும், உண்மையில் அவ்வாறான நிலைமை இல்லை. எனவே மக்களவைத் தேர்தலிலும் இம்மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தல்களில் நடைபெற்றதைப் போன்று மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்படுமா என்பதேயாகும்.


மேற்கு வங்கத்தைப் பொறுத்தவரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு என்பது, நாட்டைப்பாதுகாத்திட பாஜகவைத் தோற்கடிப்போம், மாநிலத்தைப் பாதுகாத்திட திரிணாமுல் காங்கிரசைத் தோற்கடிப்போம் என்பதாகும். மேலும் மத்தியில் ஒரு மதச்சார்பற்ற மாற்று அரசாங்கம் அமைவதற்கான நடவடிக்கைகளை எடுத்திடுவோம் என்பதும், அவ்வாறு அமைந்திடும் அரசாங்கம் சாமானிய மக்களுக்கு உதவிடும் வகையில் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நட

வடிக்கைகள் எடுக்க வைப்பதுமாகும்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

கொல்கத்தாவிலிருந்து சந்தீப் சக்ரவர்த்தி....