மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு வந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 4வது கட்ட வாக்கு பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதில், மத்திய பிரதேசத்தில் சித்தி, ஷாடோல், ஜபல்பூர், மண்ட்லா, பாலக்காட் மற்றும் சிந்த்வாரா ஆகிய 6 மக்களவை தொகுதிகளுக்கான வாக்கு பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. இதனுடன் சிந்த்வாரா தொகுதிக்கான சட்டசபை இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் கமல் நாத் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று சுனந்தா கொட்டேகர் என்பவர் சிந்த்வாரா மக்களவை தொகுதிக்காக சான்சார் பகுதியில் உள்ள லோதிகேடா மையத்திற்கு நேற்று வந்தார். இந்நிலையில் நேற்று இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதேபோன்று பாலக்காட் மக்களவை தொகுதிக்காக சியோனி பகுதியில் பணியமர்த்தப்பட்ட தேர்தல் பணியாளர் ஒருவர் நேற்று மாலை மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவால் உயிரிழந்து விட்டார். மேலும் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சித்தி மாவட்டத்திற்கு இன்று காலை வந்த உதவி ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்தார்.