tamilnadu

img

இந்தூரில் நகை கடை ஊழியர்கள் 31 பேருக்கு கொரோனா தொற்று 

மத்தியப் பிரதேசம், இந்தூரில் உள்ள ஒரு நகைக் கடையில் குறைந்தது 31 ஊழியர்கள் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக கூடுதல் ஆட்சியர் அஜய் தேவ் சர்மா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

இந்தூரில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 
31 ஊழியர்களில் 20 பேர் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. மீதமுள்ள 11 ஊழியர்களுக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து  மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த குழு நகை கடையை மூட உத்தரவிட்டுள்ளனர். 7 நாள்கள் மூடி சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்சமயத்தில் கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் பெயர்கள் குறிப்பேட்டில் உள்ளது. அதில் உள்ளவர்களையும் பரிசோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது.
 

;