மதுரை, டிச.9- மதுரை 74 ஆவது வார்டு பழங்காநத்தம் - மாடக்குளம் மற் றும் பொன்மேனி மெயின் ரோடு மேலத்தெரு பகுதியில் நீண்ட நாட்களாக மழை நீர் தேங்கி சாலை கள் குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்கக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் மதுரை மாநகர் பழங்காநத் தம் பகுதிக் குழு சார்பில் மேலத் தெருவில் நாற்று நடும் போராட் டம் நடைபெற்றது. பகுதிக் குழு செயலாளர் க.கௌதம் பாரதி தலைமை வகித்தார். வாலிபர் சங்கத்துடன் இணை ந்து அப்பகுதி பொதுமக்கள் நாற்றுகளை நட்டு மாநகராட் சிக்கு எதிராக கண்டன முழக்கங் களை எழுப்பினர். பின்னர் அங்கி ருந்து பேரணியாக பழங்காநத் தம் டிவிஷன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு வந்த உதவி பொறியாளர், கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். உட னடியாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி சாலையை சீரமைக்க நடவ டிக்கை எடுக்கிறேன் என்று கூறி னார். பழங்காநத்தம் - மாடக்குளம் மெயின் ரோடு, மாடக்குளம் - பொன்மேனி மெயின் ரோடு, ராமர் கோவில் தெப்பக்குளம் ஆகியவைகளை சீரமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவாக எழுதிக்கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட உதவி பொறியாளர் தற்போ தைக்கு சாலைகளை சீர் அமைப்ப தற்கான நடவடிக்கையை உட னடியாக எடுக்க சொல்கிறேன். தெப்பக்குளம் தூர்வாரும் பணி யை மாநகராட்சி உயர் அதிகாரி கள் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கை விடப்பட்டது. போராட்டத்தில் மாவட்ட செயலாளர் டி.செல்வா, துணைத் தலைவர் சரண், பகு திக்குழு தலைவர் சரவணன், பொருளாளர் விஷ்ணுப்பிரியன், துணைச் செயலாளர் பாலசிங் கம், கிளைச் செயலாளர் கண் ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.