tamilnadu

img

ஈரோட்டில் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சென்னை,டிச.20- ஈரோட்டில் டிசம்பர் 20 அன்று நடை பெற்ற அரசு விழாவில், 951 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் 559 முடி வுற்ற பணிகளை திறந்து வைத்தும், 133 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப் பீட்டிலான 222 புதிய திட்டப் பணி களுக்கு அடிக்கல் நாட்டியும், 50,088  பயனாளிகளுக்கு 284 கோடியே 2  லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத் திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னிமலை ஊராட்சி ஒன்றியத் தின் 22 கிராம ஊராட்சிகளில் உள்ள 434 ஊரக குடியிருப்புகளுக்கு 482  கோடியே 36 லட்சம் ரூபாய் செல வில் கூட்டுக்குடிநீர் திட்டம்; உயர் கல்வித்துறை சார்பில், ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் 1 கோடி ரூபாய் செலவில் அயல்நாட்டு மொழி கள் கற்பித்தல் மையம் மற்றும் 8  கோடியே 54 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் செலவில் உள் விளையாட்ட ரங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடிந்துள்ளன.  விழாவில், பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 50,088 பயனாளி களுக்கு 284 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, சு.முத்துசாமி,மு.பெ.சாமி நாதன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி,  மா.மதிவேந்தன், கயல்விழி  செல்வராஜ்,மக்களவை உறுப்பி னர் சுப்பராயன், அந்தியூர் கே.செல்வ ராஜ், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.