tamilnadu

இளைஞர்களை திரட்டுவோம், கட்சியை வலுப்படுத்துவோம்

சென்னை, ஜூன் 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை-செங்கல்பட்டு மாவட்டச் செயலாளராக பணியாற்றி மறைந்தவர் தோழர் எஸ்.வி.எஸ்.மணி. அவரது மனைவி எஸ்.பத்மாவதி அம்மாள் அண்மையில் காலமா னார். அவரது படத்திறப்பு நிகழ்வு  வெள்ளியன்று (ஜூன் 24) தென் சென்னை மாவட்டக்குழு அலுவல கத்தில் (எஸ்.வி.எஸ். மணி நினைவகம்) நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.பத்மாவதி அம்மாள் உருவப்படத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணனும், தோழர் எஸ்.வி.எஸ். மணி உருவப்படத்தை மூத்த தலை வர் வே.மீனாட்சிசுந்தரமும் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் பேசிய ஜி.ராம கிருஷ்ணன், “சனாதன குடும்பத்தில் பிறந்த என்னை, கம்யூனிஸ்ட் கட்சி  உறுப்பினராக இணைத்துக் கொண்ட தையே பெருமையாக கருதுகிறேன் என்று ஒருமுறை இ.எம்.எஸ்.கூறினார்.  அத்தகைய பெருமைமிகு கட்சிக்கு இ.எம்.எஸ்., பி.சுந்தரய்யா, பசவபுண் ணையா போன்றோரை பின்பற்றி தோழர் எஸ்.வி.எஸ். மணி - எஸ்.பத்மா வதி அம்மாள் ஆகியோர் தங்களது  இல்லத்தை கட்சிக்கு கொடுத்துள்ள னர்.

கட்சி வளர்ச்சிக்கு உதவிட வேண் டும் என்ற நோக்கத்தோடு வீட்டை  கொடுத்துள்ளனர். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம். இளந்தலை முறையை அதிகளவில் கட்சிக்கு கொண்டு வருவோம். கட்சியின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்; வலுப் படுத்துவோம்” என்றார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன், “கட்சி கடுமை யான நெருக்கடியில் இருந்த காலச் சூழலில் அமைப்பை கட்டியமைத்து, வளர்த்தவர்களில் எஸ்.வி.எஸ்.மணியும் ஒருவர். அதற்கு உறு துணையாக பத்மாவதி அம்மாள் இருந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தங்களது சொத்துக்களை கட்சிக்கு கொடுத்துள்ளனர். சுரண்டலில் இருந்து தொழிலாளி வர்க்கத்தை விடு தலை செய்ய வேண்டும் என்ற  உயரிய லட்சியத்தோடு இந்த  வரலாற்று பங்களிப்பை செய்துள்ள னர். இந்த பாரம்பரியத்தை அடுத் தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். அவர்களின் லட்சியத்தை நிறைவேற்ற பாடுபடுவோம்” என்றார். தோழர் எஸ்.வி.எஸ்.மணி  எழுதி வைத்த உயிலின் செயல்படுத் துபவராக மூத்த வழக்கறிஞர் ப.ராஜேந்திரன் இருந்தார். இந்த நிகழ்வில் சொத்தை கட்சிக்கு ஒப்ப டைக்கும் ஆவணத்தை அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகி ருஷ்ணனிடம் வழங்கினார். இந்நிகழ்வுக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ் தலைமை தாங்கினார். மூத்த தலை வர் வே.மீனாட்சிசுந்தரம், மாவட்டச்  செயலாளர் ஆர்.வேல்முருகன், முன்னாள் மாவட்டச் செயலாளர்  டி.நந்தகோபால், பகுதிச் செய லாளர்கள் இ.ரவி (விருகம்பாக்கம்), இ.மூர்த்தி (தி.நகர்), தோழர் பத்மாவ தியின் உறவினர் ச.சாந்தம்மாள் ஆகி யோர் பேசினர்.