tamilnadu

ஜமால் கஷோக்ஜி கொலை சவூதியின் முன்னாள் அரச காவலர் பிரான்சில் கைது

பாரீஸ், டிச.8- பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை யோடு தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பிரான் சில் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை பாரீஸில் உள்ள ஷார்ல் த கோல் விமான நிலை யத்தில் காலித் ஏத் அலோடைபி கைது செய்யப்பட்ட தாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. இந்தக் கொலை தொடர்பாக துருக்கியால் தேடப் படும் 26 சவூதி அரேபியர்களில் இவரும் ஒருவர் என நம்பப்படுகிறது.  “33 வயதான அலோடைபி, சவூதியின் முன்னாள் அரச காவலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது சொந்தப் பெயரில் பயணம் செய்துள்ளார். மேலும், அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்,” என்று ஆர்.டி.எல் வானொலி தெரிவித்துள்ளது. சவூதி அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தவர் கஷோக்ஜி. அக்டோபர் 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவூதி துணை தூதர கத்தில் படுகொலை செய்யப்பட்டார். சவூதி அரேபியாவின் முன்னாள் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையாளரான அவர், நாட்டுக்கே திரும்பி வரும்படி வற்புறுத்துவதற்காக அனுப்பப் பட்ட குழுவால், கொல்லப்பட்டதாக சவூதி அரேபியா கூறியுள்ளது. ஆனால், சவூதி அரசின் உயர்மட்ட அதி காரிகளின் உத்தரவின் பேரில்தான் அவர்கள் செயல் பட்டதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தக் கொலை, உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சவூதி அரேபியாவின் ஆட்சியாள ரான இளவரசர் முகமது பின் சல்மானின் நற்பெய ரையும் சேதப்படுத்தியது. ஆனால், அவர் இதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லையென்று மறுத்தார். சவூதி நீதிமன்றம், 2019-ம் ஆண்டு இந்தக் கொலையில் தொடர்புள்ளவர்கள் என்று பெயரை வெளியிடாமல் எட்டு பேருக்குத் தண்டனை வழங் கியது. அவர்களில் ஐந்து பேர் கொலையில் நேரடி யாகப் பங்கேற்றதாகக் கண்டறியப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், மரண தண் டனை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப் பட்டது. மேலும் மூன்று பேருக்கு, குற்றத்தை மறைத் தமைக்காக 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்தது. சவூதியின் விசாரணை, “நீதிக்கு எதிரானது” என்று கூறிய அப்போதைய ஐ.நா-வின் சிறப்பு அறிக்கையாளர் ஆக்னெஸ் காலமர்ட் அதை நிராக ரித்தார். 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கை யில், “கஷோக்ஜி, முன்கூட்டியே திட்டமிட்ட கொலைக்குப் பலியானார். இதற்கு சவூதி அரசே பொறுப்பு,” என்று காலமர்ட் தெரிவித்தார். இந்தப் பின்னணியில் தற்போது, பாரீசில் சவூதி யின் முக்கிய காவலர் கைது செய்யப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

;