tamilnadu

img

விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுகிறது விக்னேஷின் உடல்

விரைவில் தமிழகம் கொண்டுவரப்படுகிறது விக்னேஷின் உடல்

                    ஜமைக்காவின்  இந்திய தூதரகம்  தகவல்

ஜமைக்கா நாட்டின் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவில் (Turks and Caicos Islands) உள்ள லீ ஹை ரோடு என்ற  பகுதியில் திருநெல்வேலியைச் சேர்ந்தவ ருக்கு சொந்தமான ஜிகே புட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் திருநெல்வேலியைச் சேர்ந்த விக்னேஷ், சுந்தரபாண்டி, சுடலை மணி, ராஜாமணி ஆகிய 4 பேர் பணியாற்றி வருகின்றனர். மேலாளராக தென்காசி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜூம் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு திடீரென சூப்பர்  மார்க்கெட்டிற்குள் நுழைந்த மர்ம  நபர் துப்பாக்கி முனையில் காசாளர் சுந்தரபாண்டியிடம் பணம் கேட்டு மிரட்டி யுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பிறகு அவர் சுந்தரபாண்டியை துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு கடைக்குள் இருந்து ஓடி வந்த விக்னே ஷை அந்த நபர் கழுத்தில் சுட்டார். சுந்தர பாண்டிக்கு அறுவை சிகிச்சை செய்து 6 தோட்டாக்கள் வெளியே எடுக்கப்பட்டன. சுந்தரபாண்டி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். ஆனால் இந்த துப்பாக்கி சூட்டில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் உடனடியாக உடற்கூறாய்வு செய்ய போதிய வசதி இல்லாததால், டிசம்பர் 30ஆம் தேதி விக்னேஷ் உடல் உடற்கூறாய்வு செய்யப்பட்டு பிணவறையில் வைக்கப் பட்டுள்ளது.

விக்னேஷ் உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் சுபாஷ் அமிர்த ராஜ் தெரிவித்துள்ளார். இதனால் செய்வது அறியாமல் தவித்து போன விக்னேஷின் குடும்பத்தினர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இந்திய தூதரகம்

இந்நிலையில், ஜமைக்காவில் உள்ள இந்திய தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கோபாலன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,”துப்பாக்கிச் சூடு குறித்து இந்திய தூதரகத்திற்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கடந்த புதன்கிழமை (பிப்.05) விக்னேஷ் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்தோம். விமானம் மூலம் இந்த வாரம் உடலைக் கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது” என அவர் கூறினார்.

இதற்கிடையே பிப்ரவரி 6ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,”ஜமைக்கா நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனம் தொடர்பு கொள்ளப்பட்டு, விக்னேஷ் உடலை தமிழ்நாடு கொண்டுவர கேட்டுக்கொள்ளப்ப ட்டுள்ளது. அவ ருக்கான இழப்பீட்டை அவர் வேலை செய்த  நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து வழங்க தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை தமிழக அரசே ஏற்கும்” என அதில் கூறப்பட்டுள்ளது.