tamilnadu

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த 50 பேருக்கு வரவேற்பு

திருவாரூர், செப்.16 - திருவாரூர் மாவட்டம் வேப்பத்தன்குடி ஊராட்சியில் வேப்பத்தன்குடி, வயலூர் கிராமத்தைச் சார்ந்த 50 பேர் பல்வேறு அர சியல் கட்சியிலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குடும்பத்துடன் சேர்ந்தனர். நிகழ்ச்சிக்கு மூத்த தோழர் பி.மாதவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பா.கோமதி, ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்த 50 பேரை வரவேற்று, அவர் களுக்கு செந்துண்டு அணிவித்து புதிதாக அமைக்கப்பட்ட கொடிமரத்தில் செங்கொடி ஏற்றி வைத்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் சிறப்புரையாற்றினர். தொடர்ந்து தோழர் ஆரூர் மகாலிங்கத்தின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் எஸ்.சேகர், வி.ராஜங்கம், டி.ஆர்.தியாகராஜன், எஸ்.ரகுபதி, ஜெ. வானதீபன் மற்றும் கிளைச் செயலாளர்கள், வர்க்க வெகுஜன அரங்க நிர்வாகிகள், வேப்பத்தங்குடி ஏ,பி கிளை உறுப்பினர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

;