tamilnadu

img

வாலிபர் சங்கம் பிரச்சார பயணத்திற்கு வழிநெடுகிலும் எழுச்சிமிகு வரவேற்பு

சென்னை, ஏப்.22 - இளைஞர்களுக்கு வேலை கோரி தமிழகத்தின் 4 முனைகளில் இருந்து புறப்பட்ட பயணக்குழுவிற்கு மக்கள் உற்சாக  வரவேற்பளித்து வருகின்றனர். ஏப்.21 அன்று சென்னை, கன்னியா குமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு  முனைகளில் இருந்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தினர் சைக்கிள் பிரச்சாரத்தை தொடங்கினர்.

வடசென்னை

வடசென்னையில் தங்கசாலை அருகி லிருந்து மாநிலச் செயலாளர் எஸ்.பாலா  தலைமையில் புறப்பட்ட பிரச்சாரக்குழு ராயபுரம், ஆர்.கே.நகர், திருவொற்றியூர், பெரம்பூர், திரு.வி.க.நகர் உள்ளிட்ட பகுதி களில் பிரச்சாரம் செய்தது. இந்த பிரச்சா ரத்தின் நிறைவாக புளியந்தோப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கே.எஸ்.கார்த்திஷ்குமார் தலைமை தாங்கினார். தமுஎகச தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், வாலிபர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே. மகேந்திரன், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத் தமிழன், பொருளாளர் ச.முருகேசன் உள்ளிட் டோர் பேசினர்.

மத்தியசென்னை

இந்தப் பிரச்சாரக்குழு ஏப்.22 அன்று மத்திய சென்னையை வந்தடைந்தது. வில்லி வாக்கம் பகுதி அயனாவரத்திலிருந்து இரண்டாம் நாள் பிரச்சாரத்தை தொடங்கிய பயணக்குழு, எழும்பூர், ஆயிரம்விளக்கு, அண்ணாநகர் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டது.  மாவட்டத் தலைவர் கே. மணிகண்டன், செயலாளர் எஸ்.மஞ்சுளா உள்ளிட்டோர் வழிநடத்தி சென்றனர். ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் ராஜாராமன், சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, வியா பாரிகள் சங்க கூட்டமைப்பு பொதுச் செய லாளர் எம்.வி.கிருஷ்ணன், சென்னை மாநக ராட்சி செங்கொடி சங்க பொதுச் செய லாளர் பி.சீனிவாசுலு, ஆட்டோ சங்கத் தலை வர் வே.ஆறுமுகம், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தலைவர் தி.ஜெய்சங்கர், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் ராஜகோபால் உள்ளிட் டோர் தலைமையில் பயணக்குழுவிற்கு தொழிலாளி வர்க்கம் வரவேற்பு அளித்தது.

கடலூர்

புதுச்சேரியிலிருந்து சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமையிலான குழு ஏப்.22 அன்று  கடலூர் புதுச்சேரி எல்லையான சோரியங்குப்பத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. பாதிரிகுப்பம் வழியாக சென்ற குழுவினருக்கு அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் பொதுச் செயலாளர் எம். மருதவாணன் மஞ்சக்குப்பத் தில் வரவேற்பு அளித்தார். புவனா காப்பி யர்சின் உரிமையாளர் தேவநாதன் பயணக் குழுவினருககு சிற்றூண்டி வழங்கினார். நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காடாம்புலி யூர், நெய்வேலி ஆர்ச் கேடில் இரண்டாம் நாள் பிரச்சாரம் பொதுக்கூட்டத்துடன் நிறை வடைந்தது. பயணக்குழுவிற்கு வழிநெடு கிலும் சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாத வன், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் டி. கிருஷ்ணன், பொருளாளர் ஆர்.கலைச் செல்வன் உள்ளிட்டோர் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. குமரியிலிருந்தும் கோவையிலிருந்தும் புறப்பட்ட சைக்கிள் பயணக் குழுக்களுக்கும் வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.