tamilnadu

img

பணி ஓய்வுக்குப் பிறகும் பங்களிப்புக்கு ஓய்வில்லாத ஈடுபாடு

பணி ஓய்வுக்குப் பிறகும் பங்களிப்புக்கு ஓய்வில்லாத ஈடுபாடு

தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளியாக பணி யாற்றி ஓய்வு பெற்ற பிறகு மக்கள் பணி களில் ஓய்வின்றிச் செயல்பட்டுவரும் முன்னுதாரணத் தோழர்களில் ஒருவர் தான் என். கிருஷ்ணமூர்த்தி. 1946ஆம் ஆண்டு சென்னையில் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். தந்தையின் பூர்வீகம் கும்பகோணம்.  அவர் தன்னுடைய இளம் வயதிலேயே சென்னைக்கு வந்து, ‘சுதேசமித்திரன்’ நாளேட்டில் கணக்காளராக வேலை செய்து வந்தார். எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த கிருஷ்ண மூர்த்தி மருந்துக் கடை, ஜவுளிக் கடைகளில் விற்பனை உதவியாளராக வேலை செய்தார். 1970ஆம் ஆண்டு மின் வாரியத்தில் தினசரி 2 ரூபாய் என்ற அடிப்படையில் கூலித் தொழிலாளியாக வேலையில் சேர்ந்தார். நிரந்தரமாக்கப்பட்ட 90 ஆயிரம் தொழிலாளர்கள் 1971இல் ‘தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு’ (சிஐடியு) தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. அதன் தலைவர், பொதுச் செயலாளர் பொறுப்புகளில் தோழர்கள் கே. ரமணி, து. ஜானகிராமன் இயங்கினர். வாரியத்தின் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தரமாக்கக் கோரி மாநில அளவிலான இயக்கத்தை இந்தச் சங்கம் மேற்கொண்டது. சிஐடியு சங்கம் உருவான ஆண்டிலேயே கிருஷ்ணமூர்த்தி அதன் உறுப்பினரானார். வேலை நிறுத்தம் உள்ளிட்டு பலகட்டப் போராட்டங்களின் வெற்றியாக; 1973ஆம் ஆண்டு 20,000 தற்காலிகத் தொழிலாளர்கள் மின்பணி உதவியாளர்களாக (ஹெல்ப்பர்) நிரந்தர ஊழியர்களாக்கப்பட்டார்கள். கூலித் தொழிலாளியாக இருந்த கிருஷ்ணமூர்த்தியும் ஹெல்ப்பரானார். வாரியத்தின்  நிரந்தர தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழி லாளர்களையும் ஒரே அமைப்பில் உறுப்பினர் களாக்கி செயல்பட்டு வந்த இந்தச் சங்கம் தொடர்ச்சியான இயக்கங்களை மேற்கொண்டு சுமார் 90,000 ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதிலும் வெற்றி பெற்றது. சிஐடியு சங்க உறுப்பினர் என்ற அடிப்படை யில் சங்கத்தின் அறைகூவலின்பேரில் நடை பெறும் எல்லா இயக்கங்களிலும் தவறாமல் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று வந்தார். 1977ஆம் ஆண்டு பண்டிகை முன் தொகை வழங்கக் கோரி மாநில அளவில் மறியல், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சங்கம் அறைகூவல் விடுத்தது. அதில் கலந்துகொண்ட கிருஷ்ணமூர்த்தியும் கைது செய்யப்பட்டார். பிற பிரிவு தொழிலாளர்களுக்காகவும் 1981ஆம் ஆண்டு கிருஷ்ணமூர்த்தி ‘ஃபியூஸ் ஆப் கால்’ (மின் இணைப்பு துண்டிப்பு  புகார்) பிரிவின் ‘டெலிபோன் ஆப்பரேட்டர்’ (தொலைபேசிப் பதிவாளர்) பணிக்கு மாற்றப் பட்டார்.  வாரியப் பணி மாறினாலும் சங்கப் பணி  மாறாதவராக சிஐடியு அழைப்பு விடுக்கும், அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களுக்குமான எல்லா இயக்கங்களிலும் தவறாமல் பங்கேற்று வந்தார். 1995ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்ற கிருஷ்ணமூர்த்தி லைன் இன்ஸ்பெக்டர் (கம்பியிணைப்பு ஆய்வாளர்) பணியில் இணைந்  தார். 2004இல் பணி ஓய்வு வரையில் லைன் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அது சார்ந்த கட்டுமானப் பணிகளைச் செய்து வந்தார். மின்வாரிய தொழிலாளர்களிடையே பணி யாற்றியதோடு வேறு பல தொழிலாளர்களுக் கான அமைப்புகளின் பணிகளையும் உணர்வுப் பூர்வமாகச் செய்தவர் கிருஷ்ணமூர்த்தி. சிஐடியு தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பின ராகவும், மாவட்ட நிர்வாகிகளில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை திட்டச் செயலாளராகவும், மாநிலத் துணைத் தலைவராகவும் தேர்வாகி செயல் பட்டதை நிறைவோடு நினைவுகூர்கிறார். தாம் வசித்த பகுதிகளிலும் முறைசாராத் தொழிலாளர்களை சங்கமாகத் திரட்டுவதில் முனைப்போடு ஈடுபட்டவர். தென்சென்னை மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்கத்தின் தலை வராக செயல்பட்டவர். 400 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கம் பலமுறை போராடி சலவைத் தொழிலாளர்கள் பல சட்டப்பூர்வ உரிமைகளைப் பெறுவதற்கு கிருஷ்ணமூர்த்தி உதவியாக இருந்திருக்கிறார். தென்சென்னை மாவட்ட தையல் தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவ ராகவும், பிறகு பொருளாளராகவும் செயல் பட்டிருக்கிறார். தென்சென்னை மாவட்ட கட்டு மானத் தொழிலாளர் சங்க நிர்வாகியாக பணி யாற்றியிருக்கிறார். மேலும், தென்சென்னை மாவட்ட உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு சிஐடியு மாவட்டக்குழு சார்பிலான பொறுப்பாளராக இருந்திருக்கிறார். குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் உருவானபோது சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கமும் உருவானது. தோழர் வி. குமாருடன் இணைந்து அதனை உருவாக்கியவர் கிருஷ்ணமூர்த்தி. கூட்டுறவு சங்கத்தை மீட்டவர் மின்வாரியத்தில் இயங்கி வந்த சென்னை மின்வாரிய தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு அமைப்பில் 1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிஐடியு சார்பாக போட்டியிட்டவர்கள் பெரும்பான்மையாக வெற்றி பெற்றார்கள். கிருஷ்ணமூர்த்தி 2001 வரையில் 5 ஆண்டுகள் அதன் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார். இவர் பொறுப்பேற்பதற்கு முன்னதாக நிர்வாகத்தில் இருந்தவர்களின் முறைகேட்டினால் பண்டகசாலை சீர்குலைந்து நட்டத்தில் மூழ்கியிருந்தது. தலைவராக கிருஷ்ண மூர்த்தி பொறுப்பேற்ற பிறகு வரவேண்டிய கடன்களை முறையாக வசூல் செய்து, கூட்டுறவு அமைப்பை ஜனநாயகப் பூர்வமாகவும் நேர்மை யாகவும் நடத்தி லாபம் ஈட்டக்கூடிய நிறுவனமாக மாற்றியமைத்தார். இதன் மூலம் தோழர் கிருஷ்ணமூர்த்தி தொழிலாளர் நலன்களுக்கான போராளி என்பதோடு நிர்வாகத் திறமையும் கொண்டவர் என்பதைத் தொழிலாளர்கள் புரிந்துகொண்டார்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஊரக வளர்ச்சித்துறை உள்ளாட்சி ஊழியர் சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவராகப் பொறுப்பேற்று செயல் பட்டு வருகிறார். சென்னையிலும் புறநகர் பகுதி களிலும் ஊரக, உள்ளாட்சி ஊழியர்களைத் திரட்டுவதில் செயல் முனைப்போடு ஈடுபட்டு வருகிறார். கம்யூனிஸ்ட்டானார் 1977ல் ஒருநாள் சங்கத்தின் பொதுச் செய லாளர் து. ஜானகிராமன் அழைப்பில் கிருஷ்ண மூர்த்தியும் வேறு நான்கு தொழிலாளர்களும் அவரை சந்தித்தனர். அவர்களுடன் உரையாடிய தோழர்  ஜானகிராமன் அன்றைய அரசியல் நிலைமையையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அணுகுமுறையையும் விளக்கினார். கட்சி யில் சேருமாறு அழைப்பை விரிவுபடுத்தினார். சில சந்தேகங்களை கேட்ட ஐந்து பேருமே, உரிய விளக்கங்கள் கிடைத்த பிறகு கட்சியின் துணைக்குழு உறுப்பினர்களாக இணைந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் கட்சி உறுப்பினர்களாகினர். அப்போதிருந்து இன்றுவரை தொடர்ந்து  ‘தீக்கதிர்’ நாளேட்டை கிருஷ்ணமூர்த்தி வாங்கி வாசித்து வருகிறார். அப்போது கட்சியின் மின்வாரிய அரங்க இடைக்குழு செயலாளராக தோழர் மோகன் செயல்பட்டிருக்கிறார். பின்னர்  அந்தப் பொறுப்பில் அடுத்தடுத்து தோழர்  அப்பனு,  எஸ். சுப்பிரமணியன் பணியாற்றி யதைக் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். மின்வாரிய தொழிலாளர்களிடையே கட்சிப் பணியாற்றியதோடு கட்சியின் மாவட்டக்குழு நடத்திய அனைத்து இயக்கங்களிலும் கிருஷ்ணமூர்த்தி தவறாமல் கலந்து கொள்வார். பலமுறை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு கைதாகியிருக்கிறார். மின்வாரிய தொழிலாளர்களுக்கு ‘தீக்கதிர்’ நாளேட்டுடன் கட்சியின் பல வெளியீடுகளையும் கொண்டு சென்றார். கட்சி உறுப்பினராக சுறுசுறுப்பாக செயல்பட்ட பின்னணியில், மின்வாரிய கட்சி கிளையின் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 10 ஆண்டுகள் செயல்பட்டிருக்கிறார். மேலும், அரங்க இடைக்கமிட்டி உறுப்பினராக தேர்வாகி 10 ஆண்டுகள் அப்பொறுப்பில் செயல்பட்டி ருக்கிறார். தவறாத பங்கேற்பு தற்போது மடிப்பாக்கம் பகுதியில் கட்சிக் கிளை உறுப்பினராக இயங்கி வருகிறார். இக்கிளையின் செயலாளராக இருப்பவர் தோழர் பாமா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்  தலைவர் என்.எல். சீதரன் இணையர். கிளை யின் சார்பாகவும், தென்சென்னை மாவட்டக்குழு சார்பாகவும், கட்சியின் மாநிலக்குழு சார்பாகவும் நடைபெறும் எல்லா இயக்கங்களிலும் கிருஷ்ண மூர்த்தி தவறாமல் கலந்து கொள்வதைத் தோழர்கள் குறிப்பிடுகிறார்கள். கிருஷ்ணமூர்த்தி – சுலோசனா திருமணம் 1979ஆம் ஆண்டு நடைபெற்றது. மகள், மகன் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இணை யரும், இரு பிள்ளைகளும் இவருடைய இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக உள்ளனர். ஓய்வுபெற்ற ஊழியர் சங்கத்தில் பங்களிப்ப தோடு, இவரது இயக்க வேலை என்பது, தன்  குடும்பம் வசிக்கும் பகுதியில் கட்சிப் பணி களையும், தென்சென்னை மாவட்ட அளவில் தொழிற்சங்க பணிகளையும் அயராது செய்து வருகிறார். 2004 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற பிறகும், தற்போது 80 வயதிலும் ஓய்வின்றி இயங்கி வருகிறார். கட்சி, சங்கம் என தோழர்  கிருஷ்ணமூர்த்தி கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக அர்ப்பணிப்போடு ஆற்றிவரும் இயக்கப் பணி போற்று தலுக்குரியது, பின்பற்றத்தக்கது.

 பரந்துபட்ட பணிகள்  இவரது தனிச்சிறப்பு

மின்வாரியத்தில் வேலை செய்தபோதே தொழிற்சங்கத்திலும், கட்சியிலும் பணியாற்றியதோடு, சிஐடியு வழிகாட்டலில் இயங்கிவந்த சலவைத் தொழிலாளர் சங்கம், தையல் தொழிலாளர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் போன்ற சங்கங்களிலும் நிர்வாகியாகச் செயல்பட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற பிறகு 2009லிருந்து 2022 வரை மாநகராட்சி தொழிலாளர்களுக்கான செங்கொடி சங்கத்தில் நிர்வாகியாகச் செயல்பட்டிருக்கிறார். இப்போதும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சம்மேளனத்தில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் இயங்கி வருகிறார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத் தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார். மேலும், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் நல அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார்.  “பணி ஓய்வுக்குப் பிறகும் இந்த அமைப்புகளில் உணர்வுப்பூர்வமாக வேலை செய்கிறீர்களே,” என்று கேட்டபோது, “கட்சி வளர்ச்சிக்கு வர்க்க, வெகுமக்கள் அமைப்புகளின் வளர்ச்சி அடிப்படையானது என்று கட்சி கற்றுக் கொடுத்த அடிப்படையில்தான் நான் இப்போதும் இந்த அமைப்புகளில் என்னால் இயன்றவரை செயல்பட்டு வருகிறேன்,” என்றார்.