ஆய்வில் தகவல்
சென்னை, ஆக. 19- கனவுகள், தொழில் மற்றும் தங்களின் விருப்பங்கள் ஆகியவை குறித்து தமிழக இளைஞர்கள் இடையே விவோ குழுமத்தைச் சேர்ந்த ஐக்யூஓஓ ஸ்மார்ட்போன் நிறு வனம் மற்றும் சைபர் மீடியா ரிசர்ச் நிறுவனம் ஆகியவை இணைந்து ‘ஐக்யூஓஓ குவெஸ்ட்அறிக்கை 2024’ என்னும் ஆய்வை மேற் கொண்டு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்த ஆய்வு அறிக்கையானது அடுத்த தலைமுறையினரின் கனவு மற்றும் அவர்கள் ஆர்வம் ஆகியவை குறித்து தெளிவாக கூறுகிறது. உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரே சில், மலேசியா, தாய்லாந்து இந்தோனேசியா உள்ளிட்ட 7 நாடுகளில் 20 முதல் 24 வயதுள்ள 6700 இளைஞர்கள் இடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தஅறிக்கை மூன்று பகுதி களை உள்ளடக்கி உள்ளது:
இளம் தலைமுறையினரின் எண்ணம் மற்றும் அவர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஊக்கம், அவர்களின் ஆர்வத்திற்கான தேடலை தடுக்கும் சவால்கள், தடை கள் மற்றும் அவர்களின் நலன்களைத்தூண்டும் தொழில் தேர்வுகள் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பதிலளித்த 43 விழு க்காட்டினரும், உலகளவில் 46 விழுக்காட்டினரும் தங்கள் வாழ்க் கையில் வெற்றிபெற வேலை–வாழ்க்கைக்கு இடையிலான சம நிலையை விட்டுவிடத் தயாராக உள்ளனர். இந்தியாவில் உள்ள 10ல்8 (80%) இளைஞர்கள் தங்களின் வெற்றிக்கு பாலின ஏற்றத்தாழ்வு மிகப்பெரிய தடையாக இருப்பதாக நம்புகின்றனர். ஆண்களுடன் ஒப்பிடும்போது 2 மடங்கு பெண்கள் ,பாலினம் தங்களு டைய கனவுகளை வெகுவாக பாதி க்கிறது என்று தெரிவித்துள்ளனர். 4-ல் 1 இந்தியர்கள், உள்ளடக்க உருவாக்கம், தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற புதிய துறைகளில் அதிக விருப்பம் கொண்டுள்ளனர்.
உலகளாவிய இளைஞர்களு டன் ஒப்பிடும்போது இந்திய இளைஞர்கள், 2 மடங்கு முயற்சி களை மேற்கொள்கின்றனர். 46% பேர் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுப்பதற்குத் தடையாக நிதி க்கட்டுப்பாடுகளை உணர்கிறார்கள். இருப்பினும், 90% க்கும் அதிக மானோர் தடைகளை மீறி தங்கள் கனவை அடைவதில் நம்பிக்கை யுடன் உள்ளனர். 65% பேர் தோல்வியை ஒரு கற்றல் வாய்ப்பாக பார்க்கிறார்கள், மேலும் 60% பேர் அது அவர்களை தங்கள் கனவுகளை நோக்கிச் செல்லும் படிக்கட்டாக நினைக்கிறார்கள். பதில் அளித்தவர்களில் 51% தங்கள் தேடலை ஆதரிக்க உயர் படிப்பை மேற்கொள்வதாகக் கூறி யுள்ளனர், அதேநேரத்தில் 32% பேர் தங்கள் கனவுகளுக்கு ஆதரவாக பொருத்தமான வேலைகளை வேண்டும் என்று நம்புகிறார்கள்.
நிபுணர்களின் வழிகாட்டுதல், தங்கள் விருப்பங்களை ஆதரிக்கும் சக்தி வாய்ந்த கருவி என்று 49% இந்தியர்கள் நம்புகிறார்கள். இந்த ஆய்வு உலகம் முழுவதும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், மலேசியா, தாய்லாந்து மற்றும்இந்தோனேசியா உள்ளிட்ட 7 நாடுகளில் 20 முதல் 24 வயதுள்ள 6700 இளைஞர்கள் இடையே நடத்தப்பட்டது. 62% இந்திய இளைஞர்கள் தங்கள் கனவுகளை அடைய தங்கள் பொழுது போக்குகள் மற்றும் பிற ஆர்வங்களை விட்டுவிடத் தயாராக இருப்பதாக இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது என்று ஐக்யூஓஓ இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிபுன் மரியா தெரி வித்துள்ளார். எங்களின் இந்த ஆய்வானது ஒவ்வொரு இளை ஞர்களின் எண்ணங்களை பிரதி பலிக்கிறது என்றார். சைபர் மீடியா ரிசர்ச் நிறு வனத்தின் தொழில் ஆராய்ச்சி குழு மத்தின் துணைத் தலைவர் பிரபு ராம் இந்த அறிக்கை குறித்து கூறுகையில், இன்றைய டிஜிட்டல் உலகில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இளைஞர்கள் பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறார்கள் என்றார்.
- தமிழகத்தைச் சேர்ந்த 18 விழுக்காடு இளைஞர்கள் தொழில்
- நுட்பத் துறையில் நிபுணத்துவத்தை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள்.
- 60 விழுக்காடு இளைஞர்கள் தங்கள் வளர்ச்சிக்கு பொருளாதாரம் தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
- தமிழகத்தைப் பொறுத்தவரை இங்குள்ள இளைஞர்கள் தங்கள் இலக்குகளுடன் 100 விழுக்காடு சீரமைப்பைக் கொண்டுள்ளனர்.
- 86 விழுக்காட்டினர் தங்களை தங்கள் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒப்பிட்டுக் கொள்கிறார்கள்.
- 72 விழுக்காடு இளைஞர்கள் தங்களின் கனவுகளை நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.
- 45 விழுக்காடு இளைஞர்கள் தங்களுக்கு ஏற்படும் தோல்வி அந்த சவால்களை கடக்க தங்களை ஊக்குவிப்பதாக நம்புகின்றனர்.