tamilnadu

கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் கால நீட்டிப்பு வழங்கப்படாதது ஏன்?

புதுதில்லி,டிச.19- கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பி க்க சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும்  கால நீட்டிப்பு வழங்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய அமைச்சரிடம் நேரில் முறையிட்டுள்ளார். கல்வி உதவித் தொகைக்கான பல திட்டங்களின் விண்ணப்ப கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மை மாணவர்களுக்கான 10 ஆம் வகுப்பு வரையிலான உதவித் தொகை மற்றும் சிறுபான்மை மாணவிகளுக்கான பேகம் ஹஸ்ரத் மகால் தேசிய உதவித் தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்ப தேதி  டிசம்பர் 15 உடன் முடிந்து விட்டது. நவம்பரில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. கால அவகாசம் போதாததால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் திணறு கிறார்கள். மற்ற திட்டங்களுக்கு கால நீட்டிப்பு  இருக்கும் போது இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் அந்த சலுகை மறுக்கப்படுவது என்ன நியாயம்?  ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் கடிதம் தந்து நேரில் முறையிட்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

;