கும்பகோணம், ஜுலை 16 - 94 குழந்தைகள் உயிரிழந்த கும்ப கோணம் பள்ளி தீ விபத்தின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 16 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடைப்பிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கும்பகோணம் காசிராமன் தெரு வில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும் 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இதையொட்டி, இறந்த குழந்தை களின் பெற்றோர்கள், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம், மாணவர் சங்கத்தினர் மற்றும் அனைத்து அர சியல் கட்சியினர், பள்ளி குழந்தைகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உட் பட ஏராளமானோர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தீ விபத்தில் இறந்த 94 குழந்தை களின் நினைவை வெளிப்படுத்தும் வகையில், இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாகை, சம்பவம் நடந்த பள்ளி முன் ஆண்டு தோறும் வைக்கப்படுவதுபோல, இந்த ஆண்டும் பெற்றோர் தரப்பில் வைக் கப்பட்டு, மலர் வளையம் வைத்து அஞ் சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன், அருளரசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாகராஜன், சிஐடியு மாவட்ட பொருளாளர் எம்.கண்ணன், ஓய்வூதிய சங்க மாவட்டச் செயலாளர் ராஜகோபாலன், வட்டத் தலைவர் துரை ராஜ், வாலிபர் சங்க மாவட்ட பொருளா ளர் ராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சுடரேந்தி பேரணி
94 குழந்தைகளின் நினைவிடத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முன்ன தாக கும்பகோணம் பாலக்கரையில் உள்ள குழந்தைகள் நினைவு இடத்திலி ருந்து சுடர் ஏந்தி பேரணியாக நினைவி டத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தப் பட்டது. மாணவர் சங்க மாவட்டத் தலை வர் அர்ஜுன், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநில துணை செய லாளர் அரவிந்தசாமி, மாநிலச் செய லாளர் வி.மாரியப்பன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநிலச் செயலாளர் வி.மாரியப்பன் கூறுகையில், “கல்வி வியாபாரத் தீயில் வெந்து மடிந்த 94 குழந்தைகளின் நினைவு தினமான ஜூலை 16-ஐ கல்வி வியாபாரத்திற்கு எதிரான கருப்பு தினமாக அறிவிக்க வேண்டும். ஒன்றிய-மாநில அரசு களின் தனியார்மய கல்விக் கொள்கை யின் காரணமாகவும், கட்டணக் கொள் ளையாலும், அரசின் பாராமுகத்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து நிகழ் கின்றன. இதை தடுத்து நிறுத்த வேண்டும். சம்பத் கமிஷன் கூறியி ருக்கும் வழிமுறைகளை உடனடியாக அரசு அமல்படுத்தி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். கோர விபத்தில் 94 குழந்தைகள் இறந்த வழக்கு சம்பந்தமாக 10 ஆண்டு களுக்கு பிறகு தீர்ப்பு வழங்கினாலும், குற்றவாளிகளை விடுதலை செய்தி ருப்பது, தீயில் எரிந்த குழந்தைகளை மீண்டும் தீயில் எரிய வைப்பதற்கு சம மாக கருதுகிறோம்” என்றார்.