tamilnadu

img

தொடர்வண்டிப் பயணம் - கோவி.பால.முருகு

அறிவழகன் இருபது கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் புகழ் பெற்ற பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான்.அவனுடைய கிராமத்தில் தொடக்கப் பள்ளி இருந்தாலும் அவனுடைய வசதி படைத்த அப்பா ‘வேணு நம்ம கிராமத்தில யாரும் படிக்காத அந்தப் பள்ளியில்தான் படிக்க வேண்டும்’ என்று நினைத்தார்.அதற்குக் காரணம் அவருடைய பணபலமும் பணக்காரத் திமிரும்.அதனால் அறிவழகன் நாள்தோறும் அவன் ஊர் வழியாகச் செல்லும் ரயில் வண்டியில் சென்று வந்தான்.ஆனால் அறிவழகனுக்குத் தன் நண்பர்கள் படிக்கும் உள்ளூர் பள்ளியில் படிக்கத்தான் ஆசை.அப்பாவின் பேச்சைத் தட்ட முடியாதே! அந்த ரயில் தடத்தில் ஒரு நாளைக்கு இரண்டுமுறைதான் ரயில் செல்லும்.அந்த நேரம் அவனுக்குச் சரியாக அமைந்ததும் ஒரு காரணம். நாள்தோறும் ரயில் நிலை யத்திற்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து  செல்லவேண்டும்.சில கல்லூரி மாணவர் களும் அவனுக்கு நண்பராயினர். அவர்களோடு சேர்ந்து போவதில் அவ னுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.தன் வய தொத்த மாணவர்கள் இல்லை என்றாலும்” ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ  சர்க்கரை” என்ற பழமொழிப்படி அவர் களோடு இணக்கமானான்.அவன் இறங்கும்  ரயில் நிலையத்திலிருந்து பள்ளிக்கு ஒரு  கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்  டும்.

மாலை அதுபோலவே ஒரு கிலோ மீட்டர் நடந்து தொடர்வண்டி நிலையத்தை அடைவான். அதற்குள் கல்லூரி மாண வர்களும் வந்து விடுவார்கள். அவர்களை அண்ணன் என்று அழைத்து பேசுவதில் அவ னுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அதில் சில  மாணவர்கள் அறிவழகனிடம் மிகவும் அன்பு  காட்டினர். தொடர் வண்டி வந்ததும் அனைவரும் ஏறிக்கொள்வார்கள். அதில் சிலர் மட்டும் தொடர் வண்டியின் கதவுக்கு அருகில் நின்று  கொண்டும், சிலர் அமர்ந்து கொண்டும் வெளியே வேடிக்கை பார்த்து வருவார்கள்.  இவனுக்கும் அவ்வாறு கதவோரமாக நின்று வெளிப்புறக் காட்சிகளைப் பார்த்து வர வேண்டும் என்று ஆசை எழும். ஒரு முறை அப்படி வாசல் அருகில் செல்லும் போது அவனுக்கு மிகவும் நெருங்கிய நண்ப னாக இருந்த செல்வராஜ் “டேய்.. அறிவு.. அங்கேயெல்லாம் போய் நிற்காதே…பெரிய  பையன்கள் நிற்கிறார்கள் என்று நீயும் போய்  நிற்பது ஆபத்தானது”என்று கூறி தடுத்து விடுவான். மன்னன்பந்தல் கல்லூரியில் படிப்ப வர்கள் தொடர்வண்டி நிலையத்தில் இறங்காமல் அதைத் தாண்டி இருநூறு மீட்டர் தொலைவில் இருக்கும் வடகரை செல்லும் சாலையில் ஓடும் ரயிலிலிருந்து இருந்து குதித்து இறங்கிவிடுவார்கள். இதைப் பார்த்து வந்த அறிவழகனுக்கு ஒரு  யோசனை தோன்றியது நாம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிப் போனால் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டியிருக்கிறது.அதுவே செம்பனார்கோயிலிலிருந்து சங்கரன்பந்தல் செல்லும் சாலையைக் கடந்து சிறிதூரம் சென்று இறங்கினால் ஒரு  கிலோமீட்டர் தூரம் நடப்பது குறையுமே என்று எண்ணினான்.

இன்றைக்குத் திரும்பி வரும்போது அவ்விடத்தில் இறங்கிவிடுவது என்று முடிவெடுத்தான்.மாலை ஐந்து மணிக்கு தொடர்வண்டி செம்பனார்கோயில் நிலை யத்தில்நின்றது.இறங்குவதா’?வேண்டாமா?அவ்விடத்தில் செல்லும்போது வேக மெடுத்து விட்டால் என்ன செய்வது? சரியாக  அவன் இறங்க வேண்டிய இடம் நெறுங்கிக்  கொண்டிருந்தது. மனம் படக் படக்கென்று  அடித்துக் கொண்டது.இதோ அவன் இறங்க  வேண்டிய இடம் வந்துவிட்டது.வண்டி  வேகமெடுத்துப் போய்க் கொண்டிருந்தது. படியிலே ஒரு காலை வைத்துக் கைப்பிடி யை நன்றாகப் பிடித்துக் கொண்டு குதிப்ப தற்குத் தன்னைத் தயார் படுத்திக் கொண்ட வன் கையை விட்டுவிட்டுக் குதித்தான்.அவ்வளவுதான் தொடர்வண்டி சென்ற வேகத்தில் குதித்த உடனேயே தட்டுத் தடு மாறி கீழே விழுந்தான்.பக்கத்தில் இருந்த ரயில்வே மைல் கல்லில் மண்டை மோதியது.  நினைவிழந்து போனான். அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், இவன் ரயிலில் இருந்து குதித்து  இறங்கியதைக் கவனித்தவர். ஓடி வந்தார்.  மண்டை உடைந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. சற்றும் தாமதிக்காமல் தோளில் போட்டிருந்த துண்டால் உடைந்த இடத்தை இறுக்கிக் கட்டினார். அவனைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு பக்கத்தில் இருக்கும் டாக்டரிடம் ஓடினார். டாக்டர் பரிசோதித்துவிட்டு” ஐயா.. மண் டையில அடி பலமா பட்டிருக்கு. ஸ்கேன் எடுத்துப் பர்க்கணும்.அதுக்கெல்லாம் இங்க வசதி இல்ல லேட் பண்ணாம ஒரு டாக்சி எடுத்துகிட்டு மயிலாடுதுறைக்கு அழச்சிகிட்டுப் போயிடுங்க.அதான் நல்லது’’என்றார். “டாக்டர்…இந்தப் பையன யார்னே தெரி யாது.நான் மாடு மேய்ச்சிக்கிட்டு இருந்தேன்.  அப்போ இந்த பையன் ரயில்லேர்ந்து குதிச்  சிட்டான். நான் ஓடிப்போயி தூக்கிக்கிட்டு வந்தேன்” என்றார்.

“சரி…இப்ப தூக்கிக்கிட்டு வந்துட்டீங்க.. அவுங்க அப்பா யாருன்னும் தெரியா துங்கிறீங்க…” சொல்லிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த ஒருவர்.”ஸார்…இவன் நம்ம கிருஷ்ணன் மகன் .நான்  போயி செய்தியச் சொல்லி அழச்சாறேன்’’ என்றவர் மிதிவண்டியை எடுத்துக் கொண்டு  விரைந்தார். ஒரு பத்து நிமிடத்திலேயே காரையும் எடுத்துக் கொண்டு கிருஷ்ணன் வந்து சேர்ந்தார். அதற்குள் டாக்டர் இரத்தம் வெளி யேறுவதைக் கட்டுப்படுத்தினார். மயிலாடு துறையில் உள்ள பெரிய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார்கள். உடன டியாக சிடி ஸ்கேன் எடுத்தார்கள். பல  கோணங்களில் எக்ஸ்ரே வும் எடுத்தார்கள்.  சிடி ஸ்கேனில் பார்த்த டாக்டர் நல்ல வேளை யாக மூளை பாதிக்கப்படவில்லை. மண்டை  பெரிய அளவில் உடைந்திருக்கிறது. தையல் போடவேண்டும் என்றவர் ஆப ரேஷன் தியேட்டருக்குள் ஸ்ட்ச்சரில் மயக்க  நிலையில் இருந்த வேணுவைக் கொண்டு சென்றார்கள். ஒருமணி நேரம் கழித்து வெளியே கொண்டுவந்த வேணுவின் தலை  முழுவதும் பெரிய அளவில் கட்டு போடப்  பட்டிருந்தது. அதைப் பார்க்கும் போதே  ஆறுமுகத்திற்கு விபத்தின் விளைவு பெரிதாக இருந்ததைக் காண முடிந்தது.  வேணு முற்றிலும் குணமாகி மருத்துவ மனையில் இருந்து அழைத்துவர ஒரு வாரம்  ஆயிற்று. வீட்டிற்கு வந்த வேணுவிடம் “இனிமேல்  நீ அங்கே படிக்க வேண்டாம். நம்ம ஊரில்  உள்ள பள்ளியிலேயே படி. இந்தப் பள்ளி யில் படித்த நம்ம சீனுவாசன், ரெங்க ராஜு, சம்பத், அரங்கநாதன் எல்லாரும் ஆசி ரியரா இருக்காங்க. நம்ம சீனு மகன் வரத ராசன் இஞ்சினீயரா இருக்கான். நல்லா படிக்கிறவனுக்கு எந்த பள்ளியா இருந்தா என்ன” என்று சொன்னார்.