tamilnadu

img

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை தனியார்மயமாக்கக் கூடாது!

சென்னை,  அக். 28 - கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்து வமனையை தனி யார்மயமாக்கும் சுகாதாரத் துறையின் உத்தரவை உடனடி யாகத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை கீழ்ப்பாக்கத்தில் சிறப்பாக இயங்கி வரும் அரசு மன நல மருத்துவமனையை தனியாரின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் வகையில் அண்மையில் தமிழக சுகா தாரத்துறைச் செயலாளர் மருத்து வக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கு நருக்கு ஒரு கடிதத்தை அனுப்பி யிருக்கிறார். இது நாளிதழ்களிலும் செய்தியாக வெளிவந்துள்ளது. இக்கடி தத்தை சுகாதாரத்துறை செயலாளர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனையை தனி யாருக்கு தாரை வார்க்கும் இது போன்ற எந்தவொரு முயற்சிக்கும் தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சி ஸ்ட்) உறுதியாக வலியுறுத்துகிறது. ஆயிரத்திற்கும் அதிகமான புற நோயாளிகளுக்கு நாள்தோறும் சிகிச்சை அளிக்கும் இம்மருத்துவ மனை, சுமார் 800-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளுக்கும் சிறப்பான சிகிச்சை  அளித்து பாதுகாத்து வருகிறது.  சிறப்பாக செயல்பட்டு வரும் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ மனையை மேலும் மேம்படுத்தி பரா மரிப்பதற்கு மாறாக, அதைக் கம் பெனி சட்டத்தின் கீழ் இயங்கும் மருத்து வமனையாக மாற்ற வேண்டுமெனவும், அதற்கான முன்மொழிவைத் தயாரிக்க ஒரு சிறப்பு அலுவலரை நியமித்தும் தமி ழக சுகாதார செயலர் ஒரு கடிதத்தை தன்னிச்சையாக வெளியிட்டுள்ளார். பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடு சிறப்பாகவும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஓமந்தூரார் உயர்தர பன்னோக்கு மருத்துவமனை, கிண்டி கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை என சென்னையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளின் செயல்பாடுகள் முன்னுதாரணமாகவும் இருக்கும் நிலையில் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையை தனியார்மயமாக்கும் முயற்சி மிகவும் ஆபத்தானதாகும். எனவே நிதிநிலை, கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார் வசம் ஒப்படைக்கும் தமிழக சுகாதாரத் துறை செயலாளரின் முயற்சி உடனடியாக கைவிடப்பட வேண்டுமெனவும், தமிழக அரசு இதுபோன்ற தனியார்மய ஆதரவு நடவடிக்கைகளுக்கு எந்த வகையிலும் ஆதரவு அளிக்கக் கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் பேருந்தை ஊக்குவிப்பதும் சரியல்ல! 

கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையை தனியார்மயமாக்கும் திட்டம் மட்டுமன்றி, தனியார் பேருந்துகளை இயக்கும் நடவடிக்கைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. “எதிர்வரும் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக போக்குவரத்துக் கழகங்கள் சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பது சிறப்பானது. ஆனால், இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு முன்வந்துள்ள நடவடிக்கை ஏற்கத்தக்கல்ல. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக இருப்பதற்கு போக்குவரத்துக் கழகங்களின் சேவை முக்கிய பங்களிப்பு செய்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடும் முக்கிய காரணமாகும். அரசுப் பேருந்துகளை கூடுதலாக இயக்குவதற்கு திட்டமிடுவதற்குப் பதிலாக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது, அரசுக்கோ, பொதுமக்களின் நலனுக்கோ வலுசேர்க்காது. இது எதிர்காலத்தில் பொதுப்போக்குவரத்தினை தனியாருக்கு விடும் நிலை ஏற்பட்டு விடும். ஆகவே, தமிழக அரசு குறிப்பாக போக்குவரத்துத் துறையில், நேரடியாகவோ மறைமுகமாகவோ தனியார்துறையை அனுமதிக்க வேண்டாமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்” என்று கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.