tamilnadu

img

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகள் பிரிக்கப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி

சென்னை,ஜன.24- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்காக வாக்குச் சாவடிகள் பிரிக்கப்படாது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச்  செயலகத்தில் செய்தி யாளர்களை சந்தித்த  தலைமை தேர்தல் அதிகாரி கூறியதாவது:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்கு கிறது. இடைத்தேர்தலுக் கான முன்னேற்பாட்டுப் பணிகள் விரைவுபடுத் தப்பட்டுள்ளன. கடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது கொரோனா நோய்த் தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப் பட்டது. அதன்படி, ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் 2-ஆகப்  பிரிக்கப்பட்டது. ஒரே  வளாகத்தில் துணை வாக்கு ச்சாவடி ஏற்படுத்தப்பட்டு, ஒரு வாக்குச்சாவடியில் 600 வாக்காளர்களும், மற்றொரு வாக்குச்சாவடியிலும் 600 வாக்காளர்களும் என்ற அளவில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தொற்று குறைந்து இயல்பான நிலை திரும்பியுள்ளது, இதைக் கருத்தில் கொண்டு  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருந்தாலும் ஒரே வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்படும். கொரோனா காலத்தில் இருந்ததைவிட வாக்குச்சாவடிகளின் எண் ணிக்கையும், தேர்தல் பணி யாளர்களின் எண்ணிக் கையும் வெகுவாக குறை யும். அதன்படி தேர்தல் செலவும் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.