கடலூர், டிச. 9- தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி சி.வெ. கணேச னின் மனைவி பவானி அம்மாள் வியாழனன்று (டிச.9) காலமானார். சொந்த ஊரான விருதாச்சலத் தில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். பவானி அம்மாளின் மறைவுக்கு தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித் துள்ளனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், திட்டக்குடி வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோ கன், மூத்த வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன், எம்.ஜெ.நெல்சன், கிளைச் செயலாளர் இதயத்துல்லா, மார்க்கெட் கே.சேகர், மாதர் சங்க நகர தலைவர் ஆர்.சத்யா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.