திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் நகராட்சியில் தஸ்லிமா (5ஆவது வார்டு), முத்துக்குமரன் (33ஆவது வார்டு) போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். மாநிலக் குழு உறுப்பினர் மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன், ஜெயசித்ரா, திமுக கிளைச் செயலாளர் நடராஜன், பிரபு, தேமுதிக நிர்வாகி சத்தியமூர்த்தி, சிபிஐ மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சென்னை, பிப்.17- தமிழ்நாட்டில் கடந்த ஒருவார கால மாக நடந்த அனல் பறக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் வியாழ னன்று (பிப்.17) மாலையுடன் நிறை வடைந்தது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதி களை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. 2.50 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கின்றனர்.
இந்த தேர்தலில் மாநிலம் முழுவதும் 218 கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்ந் தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சி 8ஆவது வார்டில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதுதவிர காஞ்சிபுரம் மாநகராட்சி யில் அதிமுக வேட்பாளர், ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை, அத்தாணி, தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்கள், விருதுநகர் மாவட் டம் வத்திராயிருப்பு பேரூராட்சியில் ஒரு வேட்பாளரும் மரணமடைந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது 12,500 க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு மொத்தம் 57,600 க்கும் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மக்களவை, சட்டமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலைத் தொடர்ந்து, இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட் டணி கட்சிகள் ஒரு அணியாக களம் இறங்கியுள்ளன. அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக தனித்து போட்டியிடு கின்றன. திமுக கூட்டணி வேட்பாளர் களை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி கட்சி மூலம் மாவட் டம் வாரியாக பிரச்சாரம் மேற்கொண் டார். கூட்டணி கட்சித் தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக மாநகரம், நகரம், பேரூராட்சி பகுதிகளில் வீதி வீதியாக வும், வீடு வீடாகவும் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரினர்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி அர சியல் கட்சிகளின் தேர்தல் பொதுக் கூட்டங் கள், ஊர்வலங்கள் மற்றும் பிரச்சா ரங்கள் அனைத்தையும் வாக்குப் பதிவு முடிவடையும் நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்கு முன்பாக முடித்து விட வேண்டும் என்று தேர்தல் ஆணை யம் அறிவித்திருந்தது. அதன்படி, வியா ழனன்று(பிப்.17) இறுதி கட்ட பிரச்சாரம் என்பதால் வேட்பாளர் மற்றும் தலை வர்களின் பிரச்சாரத்தில் அனல் பறந்தது. மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் சிதம்பரம் நகராட்சியில் தனது பிரச்சாரத்தை நிறைவுசெய்தார், அதன்பிறகு தங்களுக்கு தொடர் பில்லாத உள்ளாட்சிகளில் வாக்காளர் அல்லாத வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட அரசியல் கட்சியினர், தொண் டர்கள் அனைவரும் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள் ளது. மாநிலம் முழுவதும் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவுசெய்வ தற்கு தேவையான அனைத்து ஏற்பாடு களையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க காவல்துறை மற்றும் துணை ராணுப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.