புதுதில்லி, ஜன. 20 - காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாட்டின் திட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது. காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டமானது கடந்த 2020-ஆம் ஆண்டு, தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆரம்பத் தில் இருந்தே கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. “இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘வரை வுத் திட்டங்கள், அதில் இருக்கும் சாதக - பாதகங்கள் ஆகியவை குறித்த ஆவ ணங்களை இரு மாநில அரசுகளும் பரிமாறிக் கொள்வதோடு, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர், ‘காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத் தில் இருந்தே கர்நாடக அரசு முகாந் திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது. மேலும் திட்டம் குறித்த ஆதா ரங்களை தாக்கல் செய்ய நாங்கள் தயா ராக இருக்கிறோம்’ என்று தெரிவித்தனர். கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழ்நாட்டின் காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு இடைக்காலமாக தடை விதிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான விவ காரத்தில், ஒன்றிய அரசு தரப்பில் இருந்து முதற்கட்ட அனுமதி கூட வழங்க ப்படவில்லை. அவ்வாறு இருக்கும் போது, திட்டத்திற்கு எப்படி தடை விதிக்க முடியும், அது சாத்தியமே கிடையாது. இந்த விவகாரத்தில் கர்நாடகா அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது. மேலும் காவிரி - வைகை -குண்டாறு இணைப்புத் திட்டம் தொடர்பான ஆதாரங்களை உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் அலு வலகம் பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை யை ஒத்திவைத்தனர்.