tamilnadu

img

அரிசி விலை 10 ஆண்டுகளில் இல்லாத கடும் உயர்வு

குருணை ஏற்றுமதிக்கும் முழுமையாகத் தடை

புதுதில்லி, செப்.10- இந்தியாவிலிருந்து அரிசி ஏற்று மதிக்கு 20 சதவிகித வரி விதித்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்  ளது. அத்துடன், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கும் தடை விதித்துள்ளது. இந்தியர்களின் முக்கிய உணவு  தானியமான அரிசிக்கு அண்மையில் ஒன்றிய பாஜக அரசு 5 சதவிகித ஜிஎஸ்டி விதித்தது. இதனால், நாடு  முழுவதும் அரிசி விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உயர்ந்தது. தமிழ்நாட்டில் சென்னையில் 26 கிலோ எடையுள்ள 1 மூட்டை பொன்னி அரிசி முன்பு 900 ரூபாய்க்கு விற்கப்பட்டது, தற்போது 1200 ரூபா யாக உயர்ந்துள்ளது. 1 மூட்டைக்கு ரூ.300 உயர்ந்துள்ளது. பொன்னி பச்சை அரிசி விலை முன்பு 1050  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட் டது. தற்போது  1250 ரூபாயாக உயர்ந்துள்ளது.  பாசுமதி அரிசியின் விலையும் 2200 ரூபாயிலிருந்து 2500 ரூபாயாக உயர்ந்தது. இது ஒருபுறமிக்க, ஒன்றிய அர சின் வேளாண்துறை வெளியிட்ட புள்ளிவிவரம், நடப்பாண்டில் இந்தி யாவில் நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டது. உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு  வங்கம் உள்ளிட்ட அரிசி அதிகம் விளையும் மாநிலங்களில் மழை குறைந்ததால் அரிசி விளைச்சல் குறைந்துள்ளதாக தெரிவித்தது. நாடு முழுவதும் தற்போது 367.55 லட்சம் ஹெக்டேர் மட்டுமே நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியது.

தடையும் விலக்கும்

இதனால் 2022-23- ஆம் ஆண்டில்  அரிசி உற்பத்தி கணிசமான பாதிப்பைச் சந்திக்கும் என்பதுடன், பற்றாக்குறை அபாயத்திற்கு நாட்டை இட்டுச் செல்லும், ஏற்கெ னவே அரிசி விலை உயர்ந்துள்ள  நிலையில், இந்த பற்றாக்குறை விலைவாசியை மேலும் கடுமையாக அதிகரிக்கும் என்ற எச்சரிக்கைகள் எழுந்தன. இந்தப் பின்னணியிலேயே  நெல்  மற்றும் அரிசி ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு திடீரென 20 சதவிகித  வரி விதித்துள்ளது. எனினும், செப். 9 முதல் 15 வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அனு மதியுடன் துறைமுகத்தில் தயாராக இருக்கும் சரக்குகளுக்கு தகுந்த ஆவணங்களின் அடிப்படையில் விலக்கு அளிக்க முன்வந்துள்ளது. புழுங்கல் அரிசி மற்றும் பாசுமதி அரிசிக்கு ஏற்றுமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் அரிசி ஏற்றுமதி யில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. உலக ஏற்றுமதி யில் இந்தியாவின் பங்கு 40 சதவிகி தமாக உள்ளது. 2021-இல் 150 நாடுக ளுக்கு 2.15 கோடி டன் அரிசியை இந்தியா அரிசியை ஏற்றுமதி செய் தது. தற்போது 20 சதவிகித வரி விதிப்பால், வரும் மாதங்களில் இந்தி யாவின் அரிசி ஏற்றுமதி 25 சதவிகி தம் அளவில் குறையும் என்று அரிசி ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ள னர். தற்போதைய வரி விதிப்பால்  இறக்குமதியாளர்கள் இந்தியா வுக்குப் பதிலாக தாய்  லாந்து, வியட்நாம், பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளிலிருந்து அதிக அளவில் அரிசியை இறக்கு மதி செய்வார்கள் என்று கூறப்படு கிறது. அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரியுடன், உடைந்த அரிசி (குருணை) ஏற்றுமதிக்கு முழுமை யாகவே தடை விதித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு,  கோதுமை தானியம், கோதுமை மாவு  (ஆட்டா) ஏற்றுமதி மற்றும் மைதா, ரவை (ரவா/சிர்கி), முழுக்கால் ஆட்டா மற்றும் அதன் விளைவாக வரும் ஆட்டா போன்ற பிற பொருட்  கள் ஏற்றுமதிக்கு ஒன்றிய அரசு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 

 

;