திருவள்ளூர், ஜூன் 24- தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அம்மணபாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை ஒட்டி திருவள்ளூர் வட்டாட்சியர் உடனடியாக இடத்தை சர்வே செய்யும் பணியை மேற்கொண்டார். இந்த நிலையில் வெள்ளியன்று (ஜூன் 23) திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்ச்சியில் அம்மணபாக்கம், அணைக்கட்டு ஆகிய பகுதியில் உள்ள 60 குடும் பங்களுக்கு வட்டாட்சியர் மதியழகன் பட்டாக்களை வழங்கினார். பட்டாவை பெற்றுக் கொண்ட அம்மக்கள் கூட்டுச் சாலையில் உள்ள தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜி.சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகளை தேடிச்சென்று பட்டாவை காட்டி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சங்கத்தின் போராட்டத்தால் தான் எங்க ளுக்கு பட்டா கிடைத்தது. என்றும் சொல்லி விவசாயி கள் சங்கத் தலைவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்தனர்.