முதலமைச்சரிடம் மார்க்சிஸ்ட் கட்சி நேரில் வலியுறுத்தல்
சென்னை,டிச.25- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை டிசம்பர் 24 அன்று தலைமைச் செயலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமை யில், மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர். அப்போது முதலமைச்சரிடம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த மனு விபரம் வருமாறு: ஊரடங்கு காலங்களில் தமிழகத்தில் நுண்நிதி நிறுவனங்களில் பெண்கள் வாங்கிய கடன்கள் குறித்த ஒரு மாதிரி ஆய்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்தியது. அந்த அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளோம். இது சம்பந்தமாக கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்களின் நடவ டிக்கைக்காக முன்வைக்கிறோம்.
- நுண்நிதி நிறுவனங்கள் சட்டவிரோத முறைகளில் ஈடுபட்டு கடன் வசூல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும்.
- ஊரடங்கு காலத்தில் கட்ட வேண்டிய கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய அவர்களுடன் அரசு பேச வேண்டும். உடன டியாக மாவட்ட அளவில் அந்நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளை அழைத்து விவாதிக்க வேண்டும். இயல்பு வாழ்க்கை திரும்பும் வரை கடனை திருப்புவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும்.
- பெண்கள் தொழில் துவங்குவதற்கு வங்கிகள் மூலம் நிதி உதவி வழங்க வேண்டும்.
- தனித்து வாழும் பெண்களுக்கு புதிய தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டிக்கு கடன் பெற முன்னுரிமை வழங்க வேண்டும்.
- நுண்நிதி நிறுவனங்களின் செயல் பாட்டை கண்காணிப்பதற்கும், இது குறித்த புகார்களை கையாளுவதற்கும் தனி அதிகாரி களை மாவட்டம்தோறும் நியமிக்க வேண்டும். தனி ஹெல்ப் லைன் உருவாக்கப்படுவது பலனளிக்கும்.
- கட்டாய வசூல் செய்து பெண்களை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கி தற்கொ லைக்குத் தள்ளும் நுண்நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
- தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத் தின் அடிப்படையில் 200 நாள் வேலையும் ரூ.600 கூலியும் வழங்க வேண்டும். அதற்கான் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும்.
- நகர்ப்புற வேலைவாய்ப்புக்குத் தங்கள் அரசு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வர வேற்கத்தக்கது. இதற்கான தனி சட்டத்தை கொண்டு வந்து நகர்ப்புறத்தில் வாழும் மக்க ளுக்கும் வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திட வேண்டும்.
- கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்பத்திற்கு தலா ரூ. 7,500 (குறைந்த பட்சம் ஆறு மாத காலம்) வழங்கிட ஒன்றிய அரசை வற்புறுத்த வேண்டும்.
- மாநில அரசே காய்கறிகளை கொள்முதல் செய்து ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.
- கந்துவட்டி தடைச் சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்று வதற்கு தாங்கள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.