tamilnadu

img

பட்ஜெட் கூட்டத்தொடரில், விவசாயத் தொழிலாளர் நலவாரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்

திருப்பூர், பிப்.11 - தமிழ்நாடு அரசு பட்ஜெட் கூட்டத்தொ டரில், விவசாயத் தொழிலாளர்கள் நல வாரிய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம், மாநிலத் தலைவர் எம்.சின்ன துரை எம்.எல்.ஏ. தலைமையில் ஞாயி றன்று திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த  காலங்களில் விவசாயத் தொழிலாளர் களின் வாழ்வாதாரம் குறித்து கோலப்பன்  ஐ.ஏ.எஸ் தலைமையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. ஆய்வுக்குழு தமிழ்நாடு  முழுவதும் பயணித்து அளித்த பரிந்து ரைகளின் அடிப்படையில், அன்றைய முதல்வர் கலைஞர், விவசாயிகள், விவ சாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை அறிவித்து செயல்படுத்தினார். நலத்திட்டங்கள் பரவலாக மக்களுக்கு கிடைத்து வந்தது. 2001 ஆம் ஆண்டில் அதிமுக அரசு நலவாரிய சட்டத்தை ரத்து செய்துவிட்டு, உழவர் பாதுகாப்புத் திட்டத்தை நிறைவேற்றியது. ஒன்றரை கோடி பேர் நலவாரிய சட்டத்தில் சேர்க்கப்பட்ட போதும், அவர்களுக்கு அடையாள அட்டைகளைக் கூட அன்றைய அரசு வழங்கவில்லை. முதி யோர் ஓய்வூதியம், திருமண உதவித் தொகை, தொழிலாளர்களின் முழுமை யான சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றை நிறைவேற்றிட, தமிழ்நாடு அரசு வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் நல வாரிய சட்டத்தை நிறைவேற்றி செயல் படுத்த வேண்டும். தனித்துறை வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்கான மதிப்பீடுத் தொகையை கேரள அரசை போல் ரூ.10 லட்சமாக உயர்த்திட வேண்டும். மிகப்பழைய வீடுகளை இடித்து விட்டு அனைவருக்கும் புதிய வீடு களை கட்டித் தர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சிகளோடு, கிராமப்புற ஊராட்சி களை இணைக்கும் தமிழ்நாடு அரசின் முடிவை திரும்பப்பெற வேண்டும்.

விவ சாயத் தொழிலாளர்களுக்கு என தனித் துறையை ஏற்படுத்த வேண்டும். பேரூ ராட்சி பகுதிக்கு அறிவித்து ஒரு கட்டம் நிறை வேற்றப்பட்டுள்ள நகர்ப்புற வேலை ஊதிய திட்டத்தை கிராமப்புற தன்மை  கொண்ட அனைத்து பேரூராட்சிகளுக் கும் விரிவுபடுத்தும் வகையில் வரும்  பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி ஒதுக் கீட்டை கூடுதலாக்கி செயல்படுத்திட வேண்டும். வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தை தமிழ்நாடு அரசு அறி வித்து செயல்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கான ஊதியப் பாக்கி ரூ.1635 கோடியை உடனடியாக வழங்கக்கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியும், தமிழ்நாடு முழுவதும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் மக்களை திரட்டி  போராட்டம் நடத்தியுள்ள போதிலும், கிராமப் புற மக்களின் வாழ்க்கை நிலையை கவ னத்தில் கொள்ளாமல் ஒன்றிய பாஜக  அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.  உடனடியாக ஊரக வேலைக்கு தொழி லாளர்களின் ஊதியப் பாக்கியை நிலுவை இல்லாமல் முழுவதுமாக ஒன்றிய அரசு  விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, சங்கத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் ஏ.லாசர், தேசிய நிலைமைகள் குறித்து விளக்க  உரையாற்றினார். மாநிலப் பொதுச்செய லாளர் வீ.அமிர்தலிங்கம் நடைபெற்ற பணிகள் குறித்த வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாநில நிர்வாகிகள் பி.வசந்தாமணி, மலைவிளைபாசி, வீ.மாரியப்பன், எம்.முத்து, மாவட்டச் செய லாளர் எஸ்.பஞ்சலிங்கம், மாவட்டத் தலை வர் ஏ.சண்முகம் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.