tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

சென்னை, பிப். 10 - காலிப் பணிடங்களை நிரப்ப வேண்டும்,  பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தினர் திங்களன்று தமிழகம் முழு வதும் 24 மணி நேர தர்ணா போராட்டத்தை துவங்கினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்று வதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு கொண்டு  வந்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வுசெய்ய 3 அதிகாரிகள் கொண்ட  குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.  இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்,  ஜாக்டோ - ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  ஏற்கெனவே அளித்த வாக்குறுதியின் அடிப்படையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை  செயல்படுத்த வேண்டும்; மூவர் ஆய்வுக் குழுவை கலைக்க வேண்டும், 21 மாத கால  ஊதிய நிலுவை, முடக்கப்பட்ட அகவிலைப்படி  நிலுவை, நிறுத்தப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளில் பணியாற்றுவோருக்கு காலமுறை  ஊதியம் வழங்க வேண்டும், சாலைப்பணியா ளர்களின் 41 மாத கால பணி நீக்கத்தை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணிக் காலமாக  முறைப்படுத்த வேண்டும், காலிப்பணியிடங் களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வரு கின்றன. அந்த வகையில், திங்களன்று மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா போராட்டத்தைத் துவங்கினர். சென்னை எழிலகத்தில் மாவட்டத் தலை வர்கள் வை.சிவக்குமார் (வடசென்னை), ஆ.கோபிநாதன் (தென்சென்னை) ஆகியோர்  தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை மாநிலப் பொருளாளர் சா.டேனியல் ஜெயசிங்  தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலா ளர்கள் ம. அந்தோணிசாமி (வடசென்னை), த. முத்துக்குமாரசாமிவேல் (தென்சென்னை) மற்றும் தோழமைச் சங்கத் தலைவர்கள் உரை யாற்றினர். சங்கத்தின் மாநிலத் தலைவர்  மு.பாஸ்கரன் விழுப்புரத்திலும், பொதுச்செய லாளர் மு.சீனிவாசன் ஈரோட்டிலும் தர்ணா வில் கலந்து கொண்டனர்.