புதுச்சேரி, டிச. 31 - கொரோனா, ஒமைக்ரான் பரவலை தொடர்ந்து புதுவையில் ஜன.31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட் டுள்ளது. புதுச்சேரி நிவாரணம் மற்றும் மறு வாழ்வு துறை செயலருமான அசோக் குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்திருந் தாலும், தற்போது ஒமைக்ரான் வைர சால் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் கீழ் பொது மக்களின் நலன் கருதி வரும் ஜனவரி 31ஆம் தேதி நள்ளிரவு வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி, இளைஞர் திருவிழா, பொங்கல் பண்டிகையை தவிர்த்து தினசரி இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர பொதுமுடக்கம் அமலில் இருக்கும்.
சனிக்கிழமை (ஜன.1) இரவு நேரங்க ளில் அனைத்து இடங்கள் மற்றும் பொது இடங்களில் கொரோனா கட்டுப் பாடு நடவடிக்கைகளை பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டும். கடற்கரை சாலை நள்ளிரவு 12.30 மணிக்கு மூடப்படும். மேலும் 2 மணிக்கு மேல் பொதுமக்கள் நடமாட்டம் இருக்கக் கூடாது. கடற்கரை சாலை, பூங்காக்கள் இரவு பொதுமுடக்க நேரம் தவிர அனைத்து நேரங்களிலும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கட்டாயம் முகக்க வசம் அணிந்து, தனிமனித இடை வெளியை கடைபிடிக்க வேண்டும். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது. புத்தாண்டு தினத்தன்று அனைத்து மத வழிபாட்டு தலங்ககளும் இரவு 10 மணிக்கு பிறகு நள்ளிரவு 12.30 வரை பொதுமக்கள் தரிசனத்துக்காக திறக்க அனுமதிக்கப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்கள் இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்க ளுக்காக திறக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.