tamilnadu

img

சிஐடியு வேலூர் மாவட்ட மாநாடு எழுச்சியுடன் துவங்கியது

வேலூர், செப். 17 - இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) ஒருங்கி ணைந்த வேலூர் மாவட்ட 13ஆவது மாநாடு சனிக்கிழமை (செப். 17) எழுச்சி ஊர்வலத் துடன் துவங்கியது. சங்கரன் பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலிருந்து ஊர்வலகத்தை மாநிலத் துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் எம்.பி.ராமச் சந்திரன் தலைமையில் நடை பெற்ற பொது மாநாட்டில் வர வேற்புக் குழுத்தலைவர் சி.ஞானசேகரன் வரவேற்றார். சிஐடியு மாநிலச் செயலாளர் கே.சி.கோபிகுமார், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.  விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.தயாநிதி, காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் கோட்ட பொருளாளர் செந்தில்வேல், விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் செ.ஏகலைவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முன்னதாக, குடியாத்தத்தி லிருந்து மாவட்ட துணைச் செயலாளர் சி.சரவணன் தலைமையில் கொண்டுவரப் பட்ட சங்கக் கொடியை மாவட்ட துணைச் செயலாளர் என்.சுசீலா பெற்றுக் கொண்டார். ராணிப்பேட்டையிலிருந்து மாவட்ட துணைத் தலைவர் என்.ரமேஷ் தலைமையில் கொண்டுவரப்பட்ட பாபு நினைவு  ஜோதியை மாவட்ட துணைத்தலைவர் எம்.காசி பெற்றுக் கொண்டார்.

;