சென்னை, டிச.3- டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகளை விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனக் கூட்டம் சனிக்கிழமையன்று (டிச.3) தாம்ப ரத்தில் நடைபெற்றது. இதனையொட்டி சம் மேளனத்தின் தலைவர் இ.பொன்முடி, பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் 25 ஆயிரத்து 300பேர் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு அதிகபட்சமாக 13 ஆயிரத்து 750 ரூபாய் ஊதி யம் வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கூலி சட்டத்திற்கு குறைவாக இந்த ஊதியம் உள் ளது. வாரவிடுமுறை, தேசிய விடுமுறை, மிகை நேர ஊதியம் போன்ற சட்டச் சலுகை கள் மறுக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் விமர் சித்து தீர்ப்பளித்தாலும், ஆட்சியாளர்கள் அதனை அமல்படுத்த மறுக்கின்றனர். திமுக ஆட்சி அமைந்த பிறகு பணி நிரந்தரம், அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் கிடைக் கும் என்று ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த னர். அதற்கு நேர்மாறாக அரசு செயல்படு கிறது. பாதுகாப்பற்ற இடங்களில் உள்ள கடைகளை கூட இடமாற்றம் செய்ய மறுக்கின் றனர். இதனால் ஊழியர்களின் உயிருக்கு உத்தரவாதமற்ற நிலை உள்ளது.
அமைச்சரின் அதீத தலையீடு
டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த மதுக் கூடங்கள் (பார்) பெரும்பாலானவை அனு மதியின்றி சட்டவிரோதமாகச் செயல்படு கின்றன. தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கூடங்களை 5 மாவட்டங்களை சேர்ந்த துறை அமைச்சரின் ஆட்கள்தான் எடுத்து நடத்தி வருகின்றனர். கடந்த ஒன்றரை வருடத்தில் 2 ஆயிரம் பணியிட மாறுதல்கள் முறையற்ற முறையில் செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்தால் உடனடியாக பணிமாறுதல் வழங்குகின்றனர். இதுகுறித்தெல்லாம் முதலமைச்சரின் கவனத்திற்கு பல்வேறு வகைகளில் கொண்டு சென்றுள்ளோம். கடந்த காலங் களை விட துறையில் அமைச்சரின் தலையீடு அதீதமாக உள்ளது. இருப்பினும் அமைச்சர் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.
யார் அந்த கரூர் கம்பெனி
கடைகளில் விற்பனையாகும் பாட்டி லுக்கு ஒரு ரூபாய் தர வேண்டும் அல்லது மொத்த விற்பனையில் ஒரு விழுக்காடு தர வேண்டும் என்று ‘கரூர் கம்பெனி’ என்ற பெயரில் மிரட்டுகின்றனர். அமைச்சர் மாவட் டத்திற்கு ஒரு ஏஜெண்டை நியமித்து மாமுல் வசூல் செய்கிறார். அரசுக்கு வரவேண்டிய வருமானத்தை மடைமாற்றம் செய்து கொள்கின்றனர். இதுகுறித்து டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இவைகுறித்தெல்லாம் பேசுவ தற்கு முதலமைச்சரிடம் நேரம் கேட்டால் தர மறுக்கிறார்.
அரசு பணம் மடைமாற்றம்
டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் வகையில் வெளியிட்டுள்ள சுற்ற றிக்கை திரும்ப பெற வேண்டும், 480 நாட்கள் பணி முடித்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து, அரசு ஊழியருக்கு இணையான ஊதி யம் தர வேண்டும், அரசுக்கு வர வேண்டிய வருவாயை மடைமாற்றம் செய்வதை தடுக்க வேண்டும், சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும், சட்டப்படியான சலு கைகளை வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விரை வில் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த செய்தியாளர் சந்திப்பின்போது பொருளாளர் ஜி.சந்திரன், துணைப்பொதுச் செயலாளர்கள் ஏ.ஜான்அந்தோணிராஜ், கே.பி.இராமு, பி.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.