தஞ்சாவூர், மே 19-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தமிழ் பல்கலைக்கழகதொலைநிலைக்கல்வி மைய வளாகத்தில் உள்ள பெரியார்-அம்பேத்கர் நூலகத்தில் சனிக்கிழமை அன்று கல்வி சார் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழக மக்கள் புரட்சிக் கழக தலைவர் அரங்க.குணசேகரன் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார். மைய ஒருங்கிணைப்பாளர் மெய்ச்சுடர் நா.வெங்கடேசன் வரவேற்றார். பேராசிரியர் கல்வி மணி பேசுகையில், “கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். தொடக்கப்பள்ளி முதல்உயர்கல்வி வரை தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றார். பேராசிரியர்கள் கோச்சடை, தமிழ்வாணன், தமிழறிஞர் சின்னப்பா தமிழர், தமிழறிஞர் அ.த.பன்னீர் செல்வம், ஆயர் த.ஜேம்ஸ், முனைவர் சுந்தரம்பாள்,ஆறு. நீலகண்டன், சித.திருவேங்கடம், ஆர்.எஸ்.வேலுச்சாமி,ஆசிரியர் மோகன், தமிழ்த் தேசிய பாடகர் சீர்த்தி, உள்ளிட்டஏராளமானோர் கலந்து கொண்டனர். நிறைவாக மருத.உதயகுமார் நன்றி கூறினார். முன்னதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் நரேந்திரன், பேராவூரணி எலும்பு முறிவு சிகிச்சை சிறப்பு மருத்துவ நிபுணர் துரை.நீலகண்டன் ஆகியோர் தமிழ் மொழியில் மருத்துவ நூல்களை எழுதியமைக்காக கருத்தரங்கில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ் வழிக் கல்வி இயக்கம்சார்பில், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்காக விழிப்புணர்வு துண்டறிக்கை, ஊரகப் பகுதிகள் தோறும் பெற்றோர்களை சந்தித்து பரப்புரை செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.