தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சேலம் மற்றும் திருச்சி மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளின் சேவைகளைப் பாராட்டி, புதுதில்லியில் நடந்த மாநிலக் கூட்டுறவு வங்கிகளின் தேசிய இணையத்தின் நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட 5 விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து அமைச்சர் பெரியசாமி வாழ்த்து பெற்றார். தலைமை செயலாளர் வெ.இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.