tamilnadu

img

குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு தமிழக அரசு பெருமிதம்

குழந்தைகள் இறப்பு விகிதம் குறைப்பு  தமிழக அரசு பெருமிதம்

சென்னை, ஜூன் 15- கடந்த நான்காண்டுகளில் தமிழக அரசு  சுகாதாரத் துறையில் செய்த சாதனைகள், பெற்ற விருதுகள் மூலம் மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக திகழ்வதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வராக மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற நான்காண் டுகளில் திமுக அரசின் சுகாதாரத் துறை  மாபெரும் சாதனைகளைத் தொடர்ந்து  நிகழ்த்தி வெற்றிகளையும், விருதுகளை யும், பாராட்டுகளையும் பெற்று மற்ற மாநிலங் களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது. மருத்துவமனைகள்  முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் அரசு பெரி யார் மருத்துவமனை, கிண்டியில், கலைஞர்  நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை திறந்து வைத்தார். சென்னை  ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை ரூ.34.6 கோடியில் மேம் படுத்தப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், காரப் பேட்டையில் உள்ள அரசு அறிஞர் அண்ணா  நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோய்க்கான சிறப்பு மையம் ரூ.120  கோடியில் கட்டப்பட்டுள்ளது. புதுக்கோட் டையில் புதிய அரசு பல் மருத்துவக் கல்லூரி  மற்றும் மருத்துவமனை அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது. 2,382 அரசுப் பள்ளி மாணவ-மாணவியர் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க ரூ.264.72 கோடி சுழல் நிதி உரு வாக்கப்பட்டு கட்டணங்களை அரசே ஏற்று உள்ளது. கிண்டியில், ரூ.151 கோடியில் இந்தி யாவின் இரண்டாவது தேசிய முதியோர் நல  மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 2 கோடியே 34 லட்சத்து 88,431 பயனாளி கள் முதன்முறை சேவைகளையும், 4  கோடியே 52 லட்சத்து 62,337 பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்றுள்ளனர். பள்ளிச்சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், தாய் சேய் நல பரிசு பெட்டகத் திட்டத்தால் ஏராளமானோர் பயனடைந்து உள்ளனர். புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட நகர்ப்புற  நலவாழ்வு மையங்கள் மூலம் புறநோயாளி களுக்கு 18 கோடியே 20 லட்சத்து 83,047 முறை சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.3,755.53 கோடியில் மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகம் திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார சீர மைப்புத் திட்டம் உலக வங்கியுடன் இணைந்து  ரூ.3,248.67 கோடியில் செயல்படுத்தப் படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 81 லட்சத்து 33,806 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும்  48 திட்டத்தில் 7 லட்சத்து 40,548 பயனாளி களுக்கு ரூ.348.84 கோடி செலவில் தனியார்  மருத்துவமனைகளில் சிகிச்சை, அரசு மருத்துவமனைகளில் 3 லட்சத்து 55,741 பய னாளிகளுக்கு ரூ.299.28 கோடி செலவில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளன. 108 ஊர்தி சேவைத் திட்டத்தில் 79.85 லட்சம் பேர் பயன டைந்துள்ளனர். உறுப்பு மாற்று ஆணையம் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் மூலம், தேசிய அளவில், தொடர்ந்து 6 ஆண்டு களாக உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை  சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்ட தற்காகவும் மற்றும் 2023-ல் 8-வது முறை யாகவும் தேசிய விருதை தமிழகம் பெற்று உள்ளது.  16,253 ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, தேவையான ஊட்டச்சத்து வழங்கப்பட்டு உள்ளது. குழந்தை இறப்பு விகிதம் 1,000  பிறப்புகளுக்கு 28 ஆக இருந்த தேசிய சரா சரியிலிருந்து 8 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூல மாக 7,433 பணியாளர்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். கிராமப் புறங்களில் பொது மருத்துவம்  சிறப்பு சேவைக்கான விருது, காசநோய் இல்லாத நிலைக்கான விருது, கர்ப்பிணி களுக்கு சிகிச்சை வழங்குவதில் சிறப்பு விருது, மலேரியா தடுப்பு சிறந்த நடவடிக் கைக்கான தேசிய விருது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சிறந்த  செயல்பாடுகளுக்கான விருது என 525 விருதுகளை பெற்றுள்ளதன் மூலம் இந்தியா வின் மிக சிறந்த மாநிலமாக தமிழகம் பாராட்டப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.