சென்னை, பிப். 17- விவசாயிகள் பெயரில் கடன் வாங்கி, விவசாயி களை ஏமாற்றிய ஆரூ ரான் சர்க்கரை ஆலை முதலாளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் கோரிக்கை விடுத்தார். மாநில அரசு எஸ்.ஏ.பி விலை அறிவித்து ஒரு டன் கரும்புக்கு ரூ. 4,000 வழங்க வேண்டும், தஞ்சை ஆரூரான் சர்க்கரை ஆலை பெற்ற கரும்பு விவசாயிகள் மீதுள்ள வங்கிக் கடனை ஆலைப் பெயரில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வெள்ளியன்று (பிப். 17) சென்னை தலை மைச் செயலகம் முற்று கைப் போராட்டம் அறிவிக் கப்பட்டிருந்தது.
அனுமதி மறுப்பு
இதையடுத்து கரும்பு விவசாயிகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டனர். அங்கு மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் தலைமையில் நடந்த போராட்டத்தை தமிழ் நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் துவக்கி வைத்தார். பின்னர் ஊர்வல மாக தலைமைச் செயல கம் நோக்கி புறப்பட்ட சிறிது தூரத்தில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அப்போது விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய பெ.சண்முகம், “தஞ்சை மாவட்டம் திருமண்டகுடி ஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு 80 நாட்களாக கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.தமிழ்நாடு முதலமைச்சர், வேளாண் துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துள் ளோம். ஆனாலும், அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காணாமல் இழுத்தடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார். விவசாயிகளின் பெயரில் அவர்களுக்கு தெரியாம லேயே ஆலை உரிமை யாளர்கள் 200 கோடி ரூபாய் வங்கிகளில் கடன் வாங்கி யுள்ளனர். அதன்பிறகு அந்த ஆலையை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்து விவசாயிகளையும் அந்த ஆலையை வாங்கியவரை யும் ஏமாற்றியவர் சுதந்திர மாக திரிந்துக் கொண்டி ருக்கிறார்.
ஆனால், கடனே வாங்காத விவசாயிகள் 80 நாட்களாக ஆலையின் முன்பு போராடிக் கொண்டி ருக்கிறார்கள். இந்த பிரச் சனையில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது. ஆலை உரிமை யாளர்கள், வங்கி அதிகாரி கள், விவசாயிகள் அனை வரையும் அழைத்துப் பேசி கடனுக்கும் விவசாயி களுக்கும் தொடர்பில்லை என்ற சான்று வழங்கி அனை வரையும் கடன் வலையிலி ருந்து விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது, . தமிழ்நாட்டில் தற்போது மூடியுள்ள மதுரை நேஷ்னல், மயிலாடுதுறை என்.பி.கே.ஆர். ஆம்பூர் ஆகிய கூட்டுறவு ஆலை களை மீண்டும் திறக்க வேண்டும் என்றும் திருத் தணி, கள்ளக்குறிச்சி 1 மூங்கில்துறைப்பட்டு, மதுராந்தகம், அமராவதி கூட்டுறவு ஆலைகளை புனரமைத்து புதுப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், பொருளாளர் சி.பெருமாள், மாநிலச் செயலாளர் தங்க காசிநாதன்,விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி, நடராஜன், நிர்வாகிகள் நல்லாக் கவுண்டர், குண்டு ரெட்டியார், ஜோதிராமன், ராஜேந்திரன், எம்.சக்திவேலு, கே.பலராமன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.