பாஜக ஆளும் திரிபுரா மாநி லத்தின் கலதேபா பகுதியில் அக்டோபர் 13 அன்று ரப்பர் ஷீட் திருடியதாக பாதல், சிரஞ்சீத் என்ற 2 பழங்குடியின இளைஞர்களை மனு பஜார் போலீசார் கைது செய்தனர். இரு வரையும் விசாரணை என்ற பெயரில் அக்டோபர் 13 அன்று மதியம் முதல் இரவு வரை மனு பஜார் போலீசார் கடு மையாக தாக்கியுள்ளனர். இதில் பாதல் உடல்நிலை மோசமடைந்தது. அடுத்த நாள் (அக்., 14) பாதலின் உறவினர்க ளைத் தொடர்பு கொண்டு, அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி போலீசார் கூறியுள்ளனர். வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் பாதலின் உடல் மேலும் மோசமடைந்தது. பாதலை அவரது உறவினர்கள் மனு பஜார் முதன்மை மருத்துவமனை, சாந்திர் பஜார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றனர். இரண்டு மருத்துவமனை மருத்துவர்களும் பாதலை ஜி.பி.மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல பரிந்துரைத்தனர். ஆனால் பாதலின் ஏழைக் குடும்பம் அவரை ஜி.பி.மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய பண வசதி இல்லாததால், அக்டோபர் 15 அன்று வீட்டிற்கே அழைத்து வந்தது. அக்டோ பர் 16 அன்று பாதல் வீட்டிலேயே உயி ரிழந்தார். இந்த சம்பவம் கலதேபா மற்றும் மனு பஜார் மக்களிடையே கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. பாதல் மரணத்து க்கு காரணமான காவல்துறை அதிகாரி களை கைது செய்து தண்டிக்கக் கோரி பழங்குடியின மக்கள் பாதலின் சடலத்தோடு மனு பஜார் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்தினர். தொடர்ந்து சப்ரூம் - அகர்தலாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பாதல் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட் டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த எச்சரிக்கையையடுத்து திரிபுரா பாஜக அரசு மனு பஜார் காவல்நிலைய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீ சாரை கைது செய்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது.