அனைத்து வகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நில வகை மாற்றம் செய்து குடிமனைப்பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே 6 வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர்கள், கோட்டாட்சியர்களிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது. திண்டுக்கல்லில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மதுரையில் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி., கே.சாமுவேல்ராஜ், திருநெல்வேலியில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற காட்சிகள்.