தேர்வாணைய தலைவருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்
மதுரை, ஏப்.11- ஸ்டாப் செலக்சன் கமிசன் சுருக்கெழுத்தர் தேர்வை எத் தனை முறை ரத்துசெய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், தேர்வர் களுக்காக பயணம் மற்றும் தங்கு மிடச் செலவுகளை ஆணையமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஆணையத்தின் தலைவர் எஸ்.கிஷோருக்கு கடி தம் எழுதியுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,அனுப்பிய கடிதம் வருமாறு: ஸ்டாப் செலக்சன் கமிசன் ஆங்கில, இந்தி சுருக்கெழுத்தர் தேர்வுகளை 2022 நவம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்தியது. பின்னர் சுருக்கெழுத்துத் திறன் தேர்வை 2023 பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தியது. எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற தமிழக தேர்வர்கள் எல்லாம் சென்னைக் குத்தான் திறன் தேர்வுக்கு செல்ல வேண்டி இருந்தது. பிப்ரவரி 15 அன்று ஆங்கில சுருக்கெழுத்து திறன் தேர்வு பிப்ரவரி 16 இந்தி சுருக்கெழுத்து திறன் தேர்வு.
ஆங்கில சுருக்கெழுத்து திறன் தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள், தேர்வு அரங்கில் எதிரொலி இருந் தது, ஒலி பெருக்கி சரியாக வேலை செய்யவில்லை என்று புகார் செய் தனர். பிப்ரவரி 17 அன்றே இந்த ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய ஊழியர் தேர்வாணையம் அறிவித் தது. இந்தி சுருக்கெழுத்து தேர்வு பற்றி அந்த அறிவிப்பில் எது வுமில்லை. மறுபடியும் 2023 மார்ச் 1 அன்று ஒரு அறிவிப்பு. பிப்ரவரி 15 அன்று நடந்து ரத்தான ஆங்கில சுருக்கெ ழுத்து திறன் தேர்வு மார்ச் 10 அன்று நடக்குமென்று அறிவிக்கப் பட்டது. அப்போதும் இந்தி சுருக்கெழுத்து திறன் தேர்வு பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. தேர்வும் நடந்து முடிந்தது. இரண் டாவது முறையாக வேறு வேறு ஊர்களைச் சேர்ந்த தேர்வர்கள் சென்னைக்கு அலைந்து தேர்வு எழுதி விட்டு வந்தார்கள். எல் லாம் முடிந்தது, தேர்வு முடிவுகள் விரைவில் வருமென காத்திருந் தார்கள். ஆனால் இன்னொரு அதிர்ச்சியே அவர்களுக்கு காத்தி ருந்தது. 2023 ஏப்ரல் 5 இல் 25 நாட்கள் கழித்து வெளி வந்த இன்னொரு அறிவிப்பு. 2023 மார்ச் 10 அன்று நடந்த ஆங்கில சுருக்கெழுத்து திறன் தேர்வு மீண்டும் ரத்து. அதோடு அந்த அறிவிப்பு நிற்க வில்லை. பிப்ரவரி 16 நடந்த இந்தி சுருக்கெழுத்து திறன் தேர்வும் ரத்து என 48 நாட்களுக்கு பின் அறி விப்பு.
இப்போது இந்தி திறன் மறு தேர்வு ஏப்ரல் 25 அன்று... ஆங்கில மறு தேர்வு ஏப்ரல் 26 அன்று. இன்னொரு முறை எல்லா தேர் வர்களும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சலை உருவாக்குவதா? இப்படி ஒரு தேர்வு மீண்டும் மீண்டும் ரத்து ஆனால் சந்தேகங் கள் எழாதா? திரும்பத் திரும்ப தேர்வு எழுது வது மன உளைச்சலை உருவாக் காதா? ஒவ்வொரு முறையும் சென் னைக்கு வா என்றால் யார் செலவு செய்வது? எளிய குடும்பங்கள் என்ன செய்யும்? பெண் தேர்வர்கள் உடன் துணைக்கு பெற்றோர் வந்தால் அவர்களுக்கு வேறு செலவு அல் லவா? திறன் தேர்வு நடத்தும் பொறுப்பு யாருக்கு ஒப்படைக் கப்பட்டது? முறையாக நடத்தா மல் இப்படி தேர்வர்களை அலைய விடுவது குறித்து என்ன நட வடிக்கை? ஆகவே இந்த தேர்வர்களின் பயணச் செலவுகள் மற்றும் தங்கு மிட செலவுகளை மத்திய ஊழியர் தேர்வாணையம் ஏற்க வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.