tamilnadu

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை கைவிடுக!

தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல் செய்வதை கைவிடுக!

சென்னை, மே 20 - தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதல்  செய்வதை கைவிட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தி உள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு முழுவதும் விவசாயி கள் உற்பத்தி செய்திடும் நெல்லை மாநில அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்து, ஒன்றிய அரசின் இந்திய உணவுக் கழகத்திற்கு (FCI) கொடுத்து வரு கிறது.  இந்நிலையில், இந்தாண்டு ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் (NCCF) மூலம்  தான் நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசை வலி யுறுத்தியதால், மாநில அரசும் இந் தாண்டு டெல்டா மாவட்டங்கள் நீங்க லாக, மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய அனு மதித்தது.  ஒன்றிய அரசின் இந்த அமைப்பு  முழுக்க, முழுக்க கூட்டுறவு அமைப் பில்லை. மாறாக, இதில் தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், வாகன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட வர்கள் கூட்டாக சேர்ந்து கொள்முதல்  செய்வதாகும். இது படிப்படியாக தனி யார் வசம் செல்லும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு விவசாயி களுக்கு உடனே பணம் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும்.  எனவே, தமிழ்நாட்டில் இதை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  மூலமே நெல் கொள்முதல் செய்திட வேண்டுமென்றும் மாநில அரசை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 8 அன்று  மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  எச்சரித்ததைப் போல், தற்போது தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணை யம் (NCCF) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு, 45 நாட்கள் கடந்த பின்பும், விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்பட வில்லை. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 23 கிராமங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணை யம் மூலம் நெல் கொள்முதல் செய்ய  அரசு அனுமதித்திருந்தது. இந்த மை யங்களில் விவசாயிகள் நெல் கொண்டு வந்த நிலையில், ஒரு சில  விவசாயிகளிடம் மட்டுமே கொள் முதல் செய்துள்ளனர். மற்ற விவசாயி களின் நெல் கொள்முதல் செய்யப்ப டாமல், திறந்தவெளியில் அடுக்கி வைத்து, தற்போது மழையில் நனைந்து வீணாகி வருகிறது.  கொள்முதல் செய்த நெல்லிற் கும் பணம் வழங்கவில்லை. கொள் முதல் செய்த ஏஜெண்ட்டிடம் கேட்டால்  பணம் வந்தால், தருகிறேன் என் கிறார். கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொடுத்து விட்டு பணம் வராமல் அவதிப்படு கின்றனர்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத் தில் கருநிலம், காட்டூர், கூடலூர், மது ராந்தகம், பெரும், தண்டலம் ஆகிய  கிராமங்களில் 19.5.2025 அன்று  நேரில் கள ஆய்வு மேற்கொண்ட தில், அனைத்து இடங்களிலும் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கப்படவில்லை. மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங் களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு  இணையம் மூலம் நெல் கொள்முதல்  செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. கொள்முதல் செய்யப் பட்ட நெல்லிற்கும், இரண்டு மாதங் கள் கடந்தும் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.  எனவே, உடனடியாக மாநில அரசு இதில் தலையிட்டு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் நெல் கொள்முதலை கை விட்டு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும். இரண்டு மாதங்கள் கடந்த  நிலையில், கொள்முதல் செய்யப் பட்ட நெல்லிற்கு உடனே விவசாயி களுக்கு பணம் பெற்றுத் தருவதற்கான  நடவடிக்கையை எடுத்திட வேண்டு மென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.