tamilnadu

img

மாநில கள வில்வித்தைப் போட்டி அறந்தாங்கி மாணவர்கள் 7 தங்கம்; 1 வெள்ளி வென்று சாதனை

அறந்தாங்கி, மார்ச் 5 - பொள்ளாச்சி பி.ஏ. கல்லூரியில் மாநில அளவிலான 2 ஆவது கள வில்வித்தை போட்டி நடைபெற்றது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள் ளாச்சி பி.ஏ. கல்லூரி வளாகத்தில் நடை பெற்ற மாநில அளவிலான கள வில் வித்தை போட்டியில், தமிழகத்தின் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பங்கு பெற்றனர்.  இதில் புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கியைச் சேர்ந்த புதுக்கோட்டை மாவட்ட கள வில்வித்தை சங்க மாணவ-மாணவிகள் 10, 14, 17,19,35, வெட்றான் பிரிவுகளில் பங்கேற்று,   இவான்ஜலின் 2 தங்கப்பதக்கம், கிறிஸ்டினா கேத்தரின் ஒரு தங்கப் பதக்கம், ஹர்சவர்தன் ஒரு வெள்ளிப்பதக்கம், நிஷாந்தினி ஒரு தங் கப்பதக்கம், மனோபாலன் ஒரு தங்கப் பதக்கம், ஆண்ட்ரூ ஒரு தங்கப் பதக்கம், ஆனந்தராஜா ஒரு தங்கப் பதக்கமும் என மெத்தம் 7 தங்கம், ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.  இம்மாணவர்களுக்கு புதுக்கோடை மாவட்ட கள வில்வித்தை சங்க செய லாளர் ஆண்ட்ரு பயிற்சி அளித்துள்ளார். இந்த மாணவ-மாணவியர்கள் 2022 மார்ச் 24 -27 மகாராஷ்டிராவில் நடைபெற விருக்கும் தேசிய கள வில்வித்தை போட்டி யில் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களை புதுக்கோட்டை மாவட்ட கள வில்வித்தை சங்க தலைவர் சாலைமா மணிசேகரன் வாழ்த்தினார்.