புதுக்கோட்டை, அக்.13- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 7-ஆவது உலகத் திரைப்படவிழா வெள்ளியன்று (அக்.14) முதல் புதுக்கோட்டை வெஸ்ட் திரையங்கில் எழுச்சியுடன் தொடங்குகிறது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா வியாழக்கிழமையன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்க ளிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் -கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இதுவரை 6 உலகத் திரைப்பட விழாக்கள் நடைபெற்றுள் ளது. சென்னை, பட்டுக்கோட்டை, கம்பம், திருப்பூர், திருவண்ணாமலை யைத் தொடர்ந்து 7-ஆவது உலகத் திரைப்பட விழா புதுக்கோட்டையில் நடைபெறுகிறது. பெருநகரங்களில் நடைபெறும் விழாக்களை விஞ்சுகிற அளவிற்கு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டையின் பாரம்பரியமிக்க திரையரங்கங்களில் ஒன்றாகிய (முற்றிலும் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு குளிரூட்டப்பட்ட) வெஸ்ட் திரையரங்கில் 7-ஆவது உலகத் திரைப்பட விழா அக்டோபர் 14 முதல் 18 வரை திருவிழா நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை வரவேற்புக்குழு சிறப்பாக முன்னெடுத்து வருகிறது. தொடக்கவிழா மற்றும் நிறைவு விழாக்களில் மாநில அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதாராமு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், உள்ளாட் சிப் பிரதிநிதிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் பங்கேற்கின்றனர். 5 நாட்க ளும் 11 நாடுகளைச் சேர்ந்த 23 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன. உலகத் திரைப்பட விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு திரைப்பட ஆளுமையுடன் ஒரு எழுத்தாளர் சந்தித்து திரைப்படங்கள் குறித்து உரையாடல் நிகழ்த்த உள்ளனர் என்றார்.