tamilnadu

img

வயதுக்கு மீறியது - கோவி.பால.முருகு

காலையில் காஃபி கொடுக்கும் போதே செல்வராஜின் மனைவி” ஏங்க…சுத்தமா காய்கறி இல்ல..மத்தி யானம் சமைக்கவே காய் வேணும்.இப்ப  போனீங்கன்னா காயெல்லாம் பசு மையா இருக்கும்”என்றாள்.”சரி பையை  எடுத்தா”என்றவன்,காஃபியைக் குடித்து விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்குப் புறப்பட்டான். எம்,ஆர் காலனியை நெருங்கும்போது.அங்கே வாடகைக்குக் குடியிருக்கும் ரெத்தினம் வீட்டின் முன்னே கூட்டமாக  நின்று  ஒருவருக்கொருவர் காரசாரமாகப் பேசிக்  கொண்டிருந்தார்கள்..சரி...என்ன பிரச்ச னையோ எதா இருந்தாலும் திரும்பி வரும்போது விசாரித்துக் கொள்ளலாம் என்று ஒதுங்கிப் போய்விட்டான்.திரும்பி வரும்போது கூட்டமில்லை பக்கிரி மட்டும் நின்று கொண்டிருந்தான். செல்வராசு வண்டியை நிறுத்திவிட்டு அங்கே நின்ற பக்கிரிசாமியை அருகில் அழைத்து மெதுவாக“ என்ன பக்கிரி  எல்லாரும் கூட்டமா நின்னீங்க .?”என்றான். “சார்…ரெத்தினம் பையன் சந்துரு இருக்கானே.அவன் காலையில டிவிஎஸ் பிஃப்டியை எடுத்துக் கொண்டு கடைக்குப் போயிருக்கான்.பக்கத்தில முதல் வளைவு இருக்கே அங்கே எதிரே வந்த இன்னொரு வண்டி மேலே மோதிட்டான்.கீழே விழுந்த திலே வலது கை எலும்பு முறிஞ்சிப் போச்சு.

அக்கம் பக்கத்தில இருக்கிறவங்க எல்லாம் ஓடிவந்து அவன தூக்கி இருக்காங்க.வலி தாங்க முடியாம ஓ...ன்னு அலறி இருக்கான்.அவனோட படிக்கிற பசங்க சந்துரு வீட்டுக்குப் போயி நடந்தத சொல்லிட்டாங்க.அலறியடித்துக் கொண்டு அவனும் அவன் மனைவியும் ஓடியாந்து யாரோட பக்கம் தவறு இருக்குன்னு தெரியாமலேயே புல்லட் வண்டியை ஓட்டி கிட்டு வந்தவன்கிட்ட  சண்டைக்குப் போயி ருக்கான் ரெத்தினம். அவன் தெளிவா சொல்லிட்டானாம்.”சின்ன பையன்கிட்ட வண்டியைக் கொடுத்து அனுப்பியிருக்க.அவனுக்கு லைசென்ஸ் வாங்குற வயசே  இன்னும் வரல வா…போலீஸ் ஸ்டேஷ னுக்குப் போவோம்”என்று அவன் சொல்ல.. இவனுக்குப் பயம் வந்திடுச்சி.அத வெளி யில காட்டாம.ரொம்ப வீரமா.. கெட்ட வார்த்தை களில் பேசியது மட்டுமில்லாமல் கை உடைந்து விட்டது அதற்கான செலவை எல்லாம் நீதான் கொடுக்கணும்னு பேசிட்டு அவனோட வண்டி சாவியை எடுத்து வைத்துக் கொண்டான்.அவனுக்குக் கோபம் வந்திடுச்சி நேரா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி கம்ப்ளையின்ட் கொடுத்துட்டான். உடனே போலீசு வந்திடுச்சி.வந்த போலீசு சும்மா லெஃட் அன்ட் ரைட்டுன்னு ரெத்தினத்த வாங்கு வாங்குன்னு வாங்கிட்டு  நூற்றெட்டு ஆம்புலன்சுக்குப் ஃபோன் பண்ணி அதுல அவன் மனைவியையும் பையனையும் ஏத்தி கடலூருக்கு அனுப்பிட்டாங்க.ரெத்தினத்த ஸ்டேஷனுக்கு அழச்சிகிட்டுப் போயி  சின்ன பையனிடம் வண்டியைக் கொடுத்து ஓட்டச் சொன்னது சட்டப்படி குற்றம்னு சொல்லி ரெத்தினம்  பேர்ல எஃப்ஐஆர் போட்டுட்டாங்க.அவனுக்கு சம்மன் வருமாம் கோர்ட்டுல போயி ஃபயின் கட்டணுமாம். கட்டலேன்னா ஆறுமாசம் ஜெயில்ல இருக்கணுமாம். இப்ப கோழியும் கொடுத்துக் குரலையும் கொடுத்த கதையா ஆளு முழி பிதிங்கிபோயி நிக்கிறான்.எப்படியும் பத்தாயிரம் இருபதாயிரம் ஃபயின் போடுவாங்க போலிருக்கு”என்று செய்தியை கொஞ்சம் மிகைப்படுத்தி ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் பக்கிரிசாமி.

“பக்கிரி… பலமுறை அந்த பையன் என் வண்டியிலேயே மோத வேண்டியவன்.நான் எச்சரிக்கையா வர்றதால விபத்து இல்லாம போவுது.எல்லாரும் அப்படி வரமாட்டான்ல.மெயின் ரோட்டுலேர்ந்து நம்ம வீட்டுக்கு வர்றத்துக்குள்ள எத்தனை வளைவு இருக்கு....!அதுவும் ஆபத்தான வளைவுகள்.ஹாரன் அடித்து மெதுவா திரும்ப வேண்டிய இடங்கள்.வண்டி ஓட்டிகிட்டு வர்றவன்ல பாதிபேருக்கு சாலை விதிகளே தெரியாது.வேகமா ஓட்டத்தான் தெரியும்.டிரைவிங் லைசென்சு வாங்காம,வண்டிக்கு இன்ஷுரன்சு எடுக்காம எத்தனை பேரு இங்க வண்டி ஓட்டிகிட்டு இருக்கான் தெரி யுமில்ல…அவனுக்கெல்லாம் விபத்து நடந்தாத்தன் தெரியும். டிரைவிங் லைசென்சு,இன்ஷூரன்சு இதோட முக்கியத்துவம்.”என்றான் செல்வராஜ். “அதுமட்டுமில்ல சார்..நான் எத்தனையோ தடவப் பார்த்திருக்கேன்.அவன் வண்டி ஓட்டறதப் பாத்து அவனும் அவன் மனைவியும் என்னா மகிழ்ச்சி அடை வாங்க தெரியுமா?இப்ப அந்த மகிழ்ச்சியில மண் விழுந்துடிச்சி”என்று தனக்கு நீண்ட நாளாக இருந்த கோபத்தைக் கொட்டித் தீர்த்தான் பக்கிரி.